பட்டதாரி இளைஞனின் பரிதாப சாவு | பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள்
ஹிட்டாச்சி வாகனம் ஏறி உடல் நசங்கி பலியான பட்டதாரி இளைஞரின் நெஞ்சை பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள்...
சேலம்:ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் பணியின்போது கவனக்குறைவால் ஹிட்டாச்சி வாகனம் ஏறி உடல் நசங்கி பலியான பட்டதாரி இளைஞரின் நெஞ்சை பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அத்தனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆயிபாளையம் பகுதியில் வசிக்கும் முருகேசன் என்பவரின் மகன் ஈஸ்வரமூர்த்தி (23). சிவில் பட்டதாரியான இவர் சேலம் வி ஆர் வி VRV கன்ஸ்ட்ரக்சன்-னில் சாலை அமைக்கும் பணியின் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இன்று சேலம் மாவட்டம் ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்கும் பணியை பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஹிட்டாச்சி வாகனம் அவர் மீது மோதி அவர் கீழே விழுந்ததால் உடலில் ஏறி உடல் முழுவதும் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது...
சம்பவ இடத்திற்கு சென்ற ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில் தற்போது பட்டதாரி இளைஞரின் உடல் அவரின் சொந்த ஊரான ஆயிப்பாளையம் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு ஏறியூட்டப்பட்டது. பட்டதாரி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.