திமுகவும் காங்கிரசும் தங்கள் வீட்டுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறது | மோடி மட்டுமே நாட்டுக்காக உழைக்கிறார் - மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு.
ஐயோ பாவம் | அவரே குழம்பிட்டாரு..ரங்கராஜனா? ராமலிங்கமா? வேட்பாளர் பெயர் கூட தெரியாமல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
ஐயோ பாவம் அவரே குழம்பிட்டாரு...ரங்கராஜனா? ராமலிங்கமா? வேட்பாளர் பெயர் கூட தெரியாமல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
காங்கிரஸ் 30 ஆண்டுகள் செய்ய முடியாததை பத்தாண்டுகளில் மோடி அரசு செய்துள்ளது.
திமுகவும் காங்கிரசும் தங்கள் வீட்டுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறது.மோடி மட்டுமே நாட்டுக்காக உழைக்கிறார் - மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு.
நாமக்கல் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாகன பேரணியில் பங்கேற்றார்.
இதனை தொடர்ந்து ராஜ்நாத் சிங் பேசினார் அன்பு சகோதர சகோதரிகளே என தமிழில் உரையை தொடர்ந்தார்.
அப்போது உலக நாடுகளில் மோடியால் நமக்கு பெருமை காங்கிரஸ் 30 ஆண்டுகள் செய்ய முடியாததை பத்தாண்டுகளில் மோடி அரசு செய்துள்ளது 2014 முன்பு நாட்டின் பொருளாதாரம் 11வது இடத்தில் இருந்தது இப்பொழுது 2024 லில் மூன்றாவது இடத்தில் பொருளாதாரம் இருக்கும்.
தற்போது 400 சீட் பெருவாரியாக பெற்று ஆட்சியைப் பிடிப்போம். இங்கு திமுகவும், காங்கிரஸ் கூட்டணியாக இருக்கிறது அதற்கு பெயர் இந்தியா கூட்டம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அதற்கு நிகராக எங்கள் கூட்டணி வெற்றி பெற தேர்தலை சந்திக்க உள்ளது பாரதிய ஜனதா கூட்டணி சொல்வதைத்தான் செய்யும் அதைத்தான் சொல்லும். தேர்தல் வாக்குறுதிகளில் சொல்வதை செய்வோம் அதன்படி ராமர் கோவிலை கட்டி முடித்திருக்கிறோம். இந்தியாவில் தற்போது ராமர் ராஜ்யத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
மெஜாரிட்டியாக ஜெயிக்கும் போது காஷ்மீர் ஆக்ட் 370 ரத்து செய்வோம் என்று கூறியிருந்தோம் அதன்படியே செய்திருக்கிறோம். எந்த மதத்திற்கும் நாங்கள் எதிரி இல்லை நாட்டை விட்டு சொல்ல வில்லை... சிட்டிசன் திட்டத்தை அமல்படுத்தி இருக்கிறோம். எந்த மதத்திற்கும் தீமை செய்யக்கூடாது என்ற விதத்தில் எந்த மதத்திற்கு யாரும் மாறி போக வேண்டிய அவசியம் தேவையில்லை. முத்தலாக் திட்டம் மக்களுக்கும் தாய்மார்களுக்கும் நன்மையே உண்டாக்கும். நாடு சுதந்திரப் பெற்ற பிறகு எந்த ஒரு பிரதமர் தலைமையிலும் நாடு முன்னேறவில்லை மோடி தலைமையில் நாடு வளர்ச்சி அடைந்துள்ளது. உலக நாடுகள் அனைவரும் மோடியை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார்கள் வேற உயர்ந்த ஒரு தலைவருக்கு இது போன்ற மதிப்பு கொடுத்ததே இல்லை.
எந்த உத்தரவாதம் கொடுத்தாலும் நாங்கள் அதை நிறைவேற்றி இருக்கிறோம் இனிவரும் காலங்களில் உத்தரவாதம் கொடுத்தால் அதை நிறைவேற்றுவோம். நாம் யாருக்கும் சலித்தவர்கள் இல்லை பாதுகாப்பு அமைச்சராக நான் கூறுகிறேன் யாருக்கும் கையேந்தி நிற்க வேண்டிய அவசியம் இல்லை உறுதியான நமது ராணுவ தளவாடங்கள் ஏவு கணைகள் தளவாடங்கள் அனைத்தும் ஏற்றுமதி செய்து கொண்டுதான் இருந்தோம்.
தற்போது இறக்குமதி செய்வதில்லை நாமே தயாரித்து நமக்கு நாட்டுக்கு தேவையான பாதுகாப்ப படி நாமே தயாரித்திருக்கிறோம். தற்போது வரை தயாரித்த தடவாடங்களை ஏற்றுமதி செய்து கொண்டு உள்ளோம் ஸ்வச் பாரத் மூலம் ஏழைகளுக்கு கழிவறை மற்றும் தரமான வீடுகளை ஏழைகளுக்கு கட்டிக் கொண்டுள்ளோம்.
சிறுவியப்பாரிகளுக்கு நல்லது செய்து கொண்டு தான் இருக்கிறோம் 2047ல் நாம் மிகப்பெரிய சக்தியான நாடாக உருவாகும். அதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் திமுகவும் காங்கிரசும் மக்களுக்கு இதுவரை எதுவும் செய்யவில்லை தற்போது வரை மோடி அரசு மக்களுக்கு இதுவரை உழைத்துக் கொண்டு இருக்கிறது.
சூப்பர் பவராக இந்தியா மாறும் அதற்காக காத்துக் கொண்டிருங்கள் நமது வேட்பாளர் கே பி ராமலிங்கம் வெற்றி பெற செய்வோம் ராமலிங்கம் பாராளுமன்றத்தில் சிறப்பாக பணியாற்றி நமக்கு தேவையான பணிகளை செய்து கொடுப்பார் ராமலிங்கத்தை வெற்றி பெற செய்யுங்கள் உங்களுக்கு நன்றி சொல்வதற்கு நானே இங்கு வருகிறேன் என் கூறி முடித்தார்.