கொல்லிமலை:சிறகடிக்கும் பட்டாம்பூச்சிகளை காண சுற்றுலாப் பயணிகள் ஆர்வம்

பட்டாம் பூச்சி பூங்கா அமையக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை.

கொல்லிமலை:சிறகடிக்கும் பட்டாம்பூச்சிகளை காண சுற்றுலாப் பயணிகள் ஆர்வம்
butterfly park

கொல்லிமலை: கூட்டம் கூட்டமாக சிறகடிக்கும் பட்டாம்பூச்சிகளை காண சுற்றுலாப் பயணிகள் ஆர்வம்:

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் சாலையோரங்களில் உலா வரும் பட்டாம் பூச்சிகள், சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

ஆன்மீக சுற்றுலா தளமாக விளங்கும் கொல்லிமலையில் சிறப்பு பெற்ற அருவிகளும் கோயில்களும், சுற்றுலா பயணிகளை கவர்ந்த நிலையில் தற்போது கூட்டம் கூட்டமாக லட்சக்கணக்கில் சிறகடித்து பறக்கும் பட்டாம் பூச்சிகள் சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்து வருகிறது.

கடந்த 1 மாதமாக பல லட்சம் பட்டாம் பூச்சிகள் கூட்டமாக சாலையோரங்களில் பறந்து பூக்களில் தேனை  சாலையோரங்களில் குறிப்பிட்ட சில செடிகளை தேடி, பட்டாம்பூச்சிகள் கூட்டம் கூட்டமாக வரத் துவங்கியுள்ளன. இதன் அழகை, உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் அதிகளவில் ரசித்து செல்கின்றனர்.

இப்பகுதியில் நிலவும் மிதமான காலநிலை, பூக்கள் ஆகியவையே பட்டாம்பூச்சிகள் அதிகளவில் படையெடுக்க காரணம். இதனை கருத்தில் கொண்டு, கொல்லிமலையில் உள்ள தோட்டக்கலை பண்ணை அல்லது தாவரவியல் பூங்காவில் பட்டாம் பூச்சி பூங்கா அமையக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை.