எப்ப சார் ரோடு போடூவீங்க | சாலையில் அமர்ந்து தர்ணா | kollihills | danger | road
பேச்சுவார்த்தையில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2024 25 ஆம் ஆண்டிற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு முன்மொழிவு
நாமக்கல்:சேதமடைந்த சாலையை சீரமைக்கக் கோரி கொல்லிமலையில் சிபிஐஎம் போராட்டம்.
சேதமடைந்த நிலையில் உள்ள கொல்லிமலை பகுதியில் உள்ள ரோட்டை சீரமைக்கக் மார்க்சிஸ் கட்சி சார்பில், கொல்லிமலையில் நடை பயணம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, சேலூர் நாடு, வெள்ளக்கல் ஆறு முதல் வண்ணாங்கிராய்பட்டி, குழிப்பட்டி வழியாக வீரகனூர் வரை செல்லும் பஞ்சாயத்து ரோடு பல ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் அவ்வழியாக செல்ல முடியாமல் மலைவாழ்மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த ரோட்டை புதுப்பிக்க கோரி, மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொல்லிமலை சேலூர் நாடு, ஊர்முடிபட்டி, குழிப்பட்டி, வீரகனூர் கிராம கிளைகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக, வண்ணாங்கிராய் ரேஷன் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு சிபிஐஎம் தாலுகா குழு செயலாளர் தங்கராசு தலைமை வகித்தார். ஊர்முடிபட்டி கிளைச் செயலாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வைத்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன், கட்சி பிரமுகர்கள் வெள்ளைச்சாமி, மாணிக்கம், ராஜ் ஆகியோர் பேசினார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரோடு, கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து, வண்ணாங்கிராய் கிராமத்தில் இருந்து, செம்மேடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நோக்கி போராட்டக் குழுவினர் நடை பயணமாக சென்றனர்.
மணப்பாறை சந்தை அருகே வந்த போராட்ட குழுவினரிடம் கொல்லிமலை பிடிஓ பாலசுப்ரமணி, பஞ்சாயத்து தலைவர் தனசேகர், போலீஸ் எஸ்.ஐ. குமார், எஸ்எஸ்ஐ மோகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, வண்ணாங்கிராய்ப்பட்டி ரோட்டை சீரமைத்து செப்பணி ஏற்கனவே கலெக்டருக்கு பரிந்துரை அனுப்பியுள்ளதாகவும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரின் கவனத்திற்கு கொண்டு சென்று, 2 மாதத்திற்குள் ரோடு புதுப்பிக்கப்படும் என எழுத்து மூலமாக பிடிஓ உறுதியளித்தார். இதையடுத்து மலைவாழ் மக்கள் போராட்டதை கைவிட்டு கலைந்துசென்றனர்.