பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு வன உயிரின வார விழா போட்டிகள் | மாவட்ட வனத்துறை சார்பில் நாமக்கல்லில் நடைபெற்றது
பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஓவியம், பேச்சு, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்

வன உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலராக குழந்தைகளை உருவாக்கும், வன உயிரின வார விழா போட்டிகள், மாவட்ட வனத்துறை சார்பில் நாமக்கல்லில் நடத்தப்பட்டன
இதுகுறித்த ஒரு செய்தித்தொகுப்பு உலகில் மனிதர்களின் அன்றாட வாழ்க்கைக்கு சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்கள் உறுதுணை புரிகின்றன. இவைகுறித்த விழிப்புணர்வை பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஏற்படுத்தும் வகையில், வன உயிரின வார விழா, மாவட்ட வனத்துறை சார்பில் நாமக்கல்லில் நடைபெற்றது.
இதில் இம்மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஓவியம், பேச்சு, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக ஓவியப் போட்டியில் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்கள் குறித்த தங்கள் எண்ணங்களை ஓவியங்களாக தீட்டினர். சுற்றுச்சூழல் அமைப்பில் யானைகள், புல்வெளி சுற்றுச்சூழல் அமைப்பு உள்ளிட்ட தலைப்புகளில் வண்ண வண்ண ஓவியங்களை வரைந்தனர்.
தொடர்ந்து தமிழ் மற்றும் ஆங்கில வழியில் நமது அன்றாட வாழ்வில் காலநிலை மாற்றத்தை தணிப்பதற்கான வழிகள், தமிழ்நாட்டு மரங்களின் முக்கியத்துவம் உள்ளிட்ட பேச்சுப் போட்டிகளும், கட்டுரை மற்றும் வினாடி வினா போட்டிகள் நடைபெற்றன.
இதுபோன்ற போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வதால் சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை மாணவ மாணவிகள் பெறுவதாக மாவட்ட வன அலுவலர் திரு. கலாநிதி தெரிவிக்கிறார். (Byte) குழந்தைகள் இளம் வயதில் இருந்தே தங்கள் கற்பனை திறனை வளர்த்துக் கொள்வதற்கு இதுபோன்ற போட்டிகள் வாய்ப்பாக அமைகின்றன என்றும் கல்வி கற்பதற்கு ஊக்கமளிக்கும் வகையில் இப்போட்டிகள் அமைந்துள்ளன என்றும் பெற்றோர் கூறுகின்றனர். (Byte) வெங்கரை அரசு பள்ளி சேர்ந்த மாணவர் சுஜித் சிறுவயதில் இருந்து ஓவிய போட்டியில் தமக்கு ஆர்வம் ஏற்பட்டதாகவும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த இப்போட்டியில் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கிறார்.
(Byte) பள்ளியில் பாடங்களை படிப்பதோடு சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் குறித்த விழிப்புணர்வை பெறுவதற்கு இதுபோன்ற போட்டிகள் பெரிதும் உறுதுணை புரிகின்றன....