ராசிபுரம் வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளி சார்பில் மாரத்தான் ஓட்டம்
வெற்றி விகாஷ் பள்ளி மாரத்தான் போட்டி நிகழ்ச்சி
வெற்றி விகாஷ் பள்ளி மாரத்தான் போட்டி நிகழ்ச்சி
ராசிபுரத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட நடந்த வெற்றி மாரத்தான் ஒட்டத்தில், 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்களது திறமையை வெளிபடுத்தினர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளி சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு மாரத்தான் ஓட்டம் நடத்தப்படுகிறது.
நடப்பாண்டு 4ம் ஆண்டாக வெற்றி மாரத்தான் ஓட்டம் ஆத்தூர் சாலையில் உள்ள கொங்கு மண்டபம் அருகே இருந்து காலை தொடங்கி, வெற்றி விகாஸ் பள்ளியில் நிறைவடைந்தது. இந்த வெற்றி மாரத்தான் ஒட்டத்தில் 16 வயதிற்கு உள்பட்ட ஆண்கள், பெண்கள் என, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உற்சாகத்துடன் பந்தய இலக்கை நோக்கி ஓடினர்.
5 கி.மீ தொலைவிற்கான இந்த ஒட்டத்தில் ஆண்கள் பிரிவில் திருச்செங்கோடு அரசினர் பள்ளி மாணவர் ரூபித்ரன் முதலிடமும், பெண்கள் பிரிவில் வெற்றி விகாஸ் மாணவி கனிஷ்கா ஸ்வந்தனா முதலிடமும் பிடித்தார்.
ரொக்க பரிசு, கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது. அதேபோல், 3 முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களுக்கு கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி ஓட்டத்திற்கு முன்னதாக, சாலை பாதுகாப்பு உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொண்டனர். #rasipuram #marathon