பயன்பாட்டிற்கு வந்த நாமக்கல் புதிய பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்த MP கே ஆர் என் ராஜேஷ்குமார்
இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்த நாமக்கல் புதிய பஸ் நிலையத்தில் பேருந்து பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்த மாநிலங்களவை உறுப்பினர் கே ஆர் என் ராஜேஷ் குமார் .

இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்த நாமக்கல் புதிய பஸ் நிலையத்தில் பேருந்து பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்த மாநிலங்களவை உறுப்பினர் கே ஆர் என் ராஜேஷ்குமார் .
நாமக்கல் மாநகராட்சி முதலைப்பட்டியில் ரூ.19.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் தளபதி M. K. Stalin அவர்களால் கடந்த 22.10.2024 அன்று திறந்து வைக்கப்பட்டது.
தனைத் தொடர்ந்து இன்றைய தினம் பேருந்துகள் இயக்கப்படுவதை முன்னிட்டு, பொதுமக்களுக்கான குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், சிரமமின்றி பயணங்களை மேற்கொள்ள செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மாநிலங்களவை உறுப்பினரும் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆன கே ஆர் என் ராஜேஷ்குமார் , ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, தலைமையில், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.மாதேஸ்வரன் அவர்கள், மாநகராட்சி மேயர் திரு.து.கலாநிதி ஆகியோர் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்வித்தனர். இந்நிகழ்வில் கிழக்கு நகர செயலாளர் துணை மேயர் திரு.செ.பூபதி, நகர கழக செயலாளர்கள் திரு.ராணா ஆனந்த், மேற்கு நகர செயலாளர் திரு.சிவக்குமார், மாநகராட்சி ஆணையாளர் திருமதி மகேஸ்வரி, மாநகராட்சி பொறியாளர் திரு.ஆர்.சண்முகம், வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.முருகன் ஆகியோர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.