பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் உண்டியல் என்னும் பணி | லட்சக்கணக்கில் குவிந்த காணிக்கை | namakkal
கடந்த ஜூன்.21–ஆம் தேதி உண்டியல்கள் திறக்கப்பட்ட நிலையில் இன்று (அக்டோபர் 18) இரு கோயில்களில் உள்ள 10 உண்டியல்கள் திறக்கப்பட்டன.

நாமக்கல் ஆஞ்சநேயர் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணியதில் ரூ.57.71 லட்சம் ரொக்கப்பணம் காணிக்கை
நாமக்கல்லில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர், நரசிம்மர் கோயில்களில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பக்தர்கள் செலுத்திய காணிக்கை உண்டியல்கள் திறக்கப்பட்டு அதில் உள்ள காணிக்கை பணம், நகைகள் எண்ணப்படுவது வழக்கம்.
கடந்த ஜூன்.21–ஆம் தேதி உண்டியல்கள் திறக்கப்பட்ட நிலையில் இன்று (அக்டோபர் 18) இரு கோயில்களில் உள்ள 10 உண்டியல்கள் திறக்கப்பட்டன.
ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் உள்ள பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் வைக்கப்பட்டு காணிக்கைகளை எண்ணும் பணி காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரையில் நடைபெற்றது. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் உதவி ஆணையர் ரமணி காந்தன், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் உதவி ஆணையர் இளையராஜா ஆகியோரது மேற்பார்வையில், திருச்செங்கோட்டைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் 150–க்கும் மேற்பட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இதில், ரூ. 57 லட்சத்து 71 ஆயிரத்து 828 ரொக்கம், 53 கிராம் தங்கம், 273 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்