திரிசூலத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அம்மன் | உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புகார் | என்னடா இது அம்மனுக்கு வந்த சோதனை?

திரிசூலத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அம்மன் : உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புகார் :மாஸ்க் அணிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த அம்மன்

பெண்களை கேலி செய்யதவர்களை தட்டி கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல்.

கவனத்தை ஈர்க்கும் வகையில் அம்மன் வேடம் அணிந்து மனு அளிக்க நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு.

பெண்களை தவறாக பேசியவர்களை தட்டி கேட்டதால், தன்னை தொடர்ந்து அநாகரிகமாக பேசியதுடன், என் உயிருக்கு அச்சுருத்தல் ஏற்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, வளையப்பட்டியை சேர்ந்த புவனேஸ்வரி (43) என்பவர், ‘அம்மன்’ வேடத்தில், நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார். அதனால், பரபரப்பு ஏற்பட்டது.

அந்த மனுவில் நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டியில் உள்ள முத்துராஜா தெருவில் வசித்து வருகிறேன். தையல் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். என் கணவர் ஞானசேகரன், கட்டிட கூலி வேலை செய்து வருகிறார். எங்களுக்கு, யுகன், அஸ்வின் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். எங்கள் பகுதியில் சிலர், சாலையில் செல்லும் பெண்களை கேலி, கிண்டல் செய்து வந்தனர். அவர்களை நான் தட்டிக்கேட்டேன். அதை தொடர்ந்து, அவர்கள் என்னையும், என் குடும்பத்தையும் தகாத வார்த்தையால் திட்டுவதும், தொடர்ந்து பிரச்னை செய்து வருகின்றனர். எங்கள் குடும்பத்தினரை அவ்வப்போது தாக்கி வருகின்றனர். இது குறித்து, மோகனுார் போலீசில் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவர்கள் பிரச்னை செய்வதால், எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. நாங்கள் கடன் வாங்கி வீடு கட்டி உள்ளோம். அதற்காக மாத தவணை செலுத்தி வருகிறோம். தொடர்ந்து, பிரச்னை செய்வதால், எங்கள் வருமானம் பாதிக்கப்படுகிறது. அதனால், தவணை செலுத்த முடியாமல் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளோம்.

இந்த நிலை தொடர்ந்து நீடித்தால், என்னால் தவணை செலுத்த முடியாமல் தற்கொலை செய்ய நேரிடும். எங்கள் உயிர் பாதுகாப்பிற்காவும், வாழ்வாதாரத்திற்காகவும், எங்கள் மன நிம்பதிக்காகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனு அளிக்க வந்த பெண் ‘அம்மன்’ வேடம் அணிந்து, கையில் ‘திரிசூலம்’ வைத்திருந்தார். பலரின் கவனம் தன் பக்கம் திரும்பும் வகையில், நுாதன முறையில், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்ததால் பெரும் பரபரப்பு