BSNL நிறுவனம் செல்போன் டவரை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் அலட்சியமாக செயல்படுவதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம் | namakkal |bsnl
செல்போன் டவர் மக்கள் பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டு வராவிட்டால் செல்போன் டவர் அருகே அமர்ந்து தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்து போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிவித்துள்ளனர்
பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிஎஸ்என்எல் டவரை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், நாமகிரிப்பேட்டை ஒன்றியம், ஊனாந்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியவரவூர், சின்ன வரவூர், கீரைக்காடு, குட்டைக்காடு, புதுவலவு, பெரிய செக்கடி, சின்ன செக்கடி, கொளக்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடி இன மக்கள் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
அப்பகுதிக்கு நீண்ட நாட்களாக செல்போன் டவர் சிக்னல் கிடைக்காமல் மாணவர்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஊர் பொதுமக்களின் பல கட்ட போராட்டத்தின் விளைவாக பிஎஸ்என்எல் தொலைதொடர்பு நிறுவனம் பலகோடி ரூபாய் செலவில் 2 செல்போன் டவர்கள் பெரிய வரகூர் மற்றும் கொளக்கமேடு பகுதிகளில் அமைக்கப்பட்டு நீண்ட நாள் ஆகிறது. ஆனால் மக்கள் பயன்பாட்டிற்கு இது வரை வரவில்லை.
பிஎஸ்என்எல் நிறுவனம் செல்போன் டவரை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் அலட்சியமாக செயல்படுவதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் 2024 நவம்பர் 17ஞாயிறு காலை 11 மணிக்கு ஊனாந்தாங்கல் ஊராட்சி கீரைக்காடு, கொளக்கமேடு பகுதி கிளைகள் , ஊர் பொதுமக்கள் சார்பில் பெரியவரகூர் நியாய விலை கடை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு கட்சியின் கீரைக்காடு கொளக்கமேடு கிளைச் செயலாளர் எஸ்.சுப்பிரமணி பி.சண்முகம் ஆகியோர் தலைமை வகித்தனர். போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.டி.கண்ணன் ஒன்றிய செயலாளர் வி.பி.சபாபதி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.சின்னசாமி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர்கள் எ.பழனிச்சாமி எஸ்.நர்மதாதேவி உள்ளிட்ட சுமார் 70-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பிஎஸ்என்எல் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கும் பொழுது நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 27 பிஎஸ்என்எல் டவர் அமைப்பதற்கு திட்டம் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. யுனிவர்சல் சர்வீஸ் அப்ளிகேஷன் ஃபண்ட் (USOF) என்ற திட்டத்தின் மூலமாக செல்போன் சிக்னல் கிடைக்காத மேற்படி பகுதிகளுக்கு புதிய டவர்கள் அமைப்பதற்கு ஜியோ நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் ஜியோ நிறுவனம் மேற்படி பகுதிகளில் செல்போன் டவர் அமைத்தால் தங்களுக்கு போதுமான லாபம் கிடைக்காது என்று கருதி மேற்படி பகுதிகளில் செல்போன் டவர் அமைக்க மறுத்துவிட்டது. எனவே நீண்ட நாட்களுக்கு பின்னர் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 27 செல்போன் டவர் அமைப்பதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கி உள்ளது. குறிப்பாக 15 மலை கிராமங்களில் கொல்லிமலையில் 13 இடங்களிலும் கொல்லிமலை அடிவாரப்பகுதியில் 3 இடங்களில் பெரிய கோம்பை கொழக்கமேடு பெரிய வரகூர் உள்ளிட்ட பகுதிகளில் செல்போன் டவர் அமைக்கப்பட்டுள்ளது. கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களில் 10 டவர்கள் அடிவாரப் பகுதிகளில் மூன்று டவர்களில் 2 டவர்கள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 டவர்களில் சேலூர் நாடு சேப்பன்குளம்பட்டி திண்ணனூர் நாடு படகு இல்லம் எடப்புலி நாடு செங்கரை அடிவாரப் பகுதியான ஊனாந்தாங்கல் ஊராட்சி பெரிய வரகூர் கோம்பை ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பிஎஸ்என்எல் செல்போன் டவருக்கு சிக்னல் கிடைப்பதில் தொழில்நுட்ப பிரச்சனை உள்ளது. எனவே மேற்கண்ட செல்போன் டவர் களுக்கு மாற்று அல்லது புதிய தொழில்நுட்பத்தின் மூலம் சிக்னல் கிடைக்க சாத்திய கூறுகளை ஆராய்ந்து வருகிறோம். குறிப்பாக பெரிய வரகூர் கோம்பை செல்போன் டவருக்கு சிக்னல் கிடைப்பதற்கு அந்தப் பகுதியில் உள்ள மலையில் இரண்டு மீட்டர் தடையாக உள்ளதாகவும் மலையின் இரண்டு மீட்டர் உயரத்தை அகற்றுவதற்கு வனத்துறை சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளிடம் அனுமதி பெறுவது மிகவும் கடினம். ஆகவே கொழக்கமேடு பகுதியில் இருந்து கம்பி வட தடம் மூலமாக பெரிய கோம்பை செல்போன் டவருக்கு இணைப்பு கொடுக்கப்பட்டு 15 நாட்களுக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான நிர்வாக அனுமதிக்காக பிஎஸ்என்எல் தொலை தொடர்பு நிறுவனத்தின் நாமக்கல் பொது மேலாளர் மண்டல பொது மேலாளர் ஆகியோரின் நிர்வாக அனுமதிக்காகவும் காத்திருப்பதாகவும் தெரிவித்தனர். நிர்வாக அனுமதி கிடைத்தவுடன் பெரிய வரகூர் கோம்பை பகுதி செல்போன் டவர் உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்தனர்.
குறிப்பாக நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினர் கே ஆர் என் ராஜேஷ்குமார் அவர்கள் செல்போன் டவர் சிக்னல் கிடைக்காத நான்கு பகுதிகளுக்கு நான்கு செல்போன் டவர் அனுமதி கேட்டு நாடாளுமன்றத்தில் பேசி உள்ளதாகவும் அதற்கான அனுமதி கிடைத்தவுடன் அதற்கான பணிகளும் விரைந்து முடிக்கப்படும் மேலும் மேற்படி செல்போன் டவர்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்த பின்னர் சிக்னல் கிடைக்காத மற்ற பகுதிகளுக்கு புதிய திட்ட முன்வரைவு உருவாக்கப்பட்டு மத்திய அரசின் அனுமதிக்காக நாடாளுமன்றத்திற்கு அனுப்ப இருப்பதாகவும் அதன் அனுமதி பெற்ற பின்னர் அனைத்து பகுதிகளுக்கும் செல்போன் சிக்னல் கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ டி கண்ணன் கூறியதாவது பெரிய செல்போன் டவர் மக்கள் பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டு வராவிட்டால் செல்போன் டவர் அருகே அமர்ந்து தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்து போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிவித்துள்ளனர்.