இராசிபுரம்:படையப்பா நகரில் பேருந்து நிலையம் அமைப்பதை தடுக்க கோரி | மக்கள் நல குழுவின் மனு | rasipuram

இராசிபுரம் மக்கள் நல குழுவின் பொறுப்பாளர்கள் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும்,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு

இராசிபுரம்:படையப்பா நகரில் பேருந்து நிலையம் அமைப்பதை தடுக்க கோரி | மக்கள் நல குழுவின் மனு | rasipuram
மக்கள் நல குழுவின் மனு | rasipuram

இராசிபுரம் மக்கள் நல குழுவின் பொறுப்பாளர்கள் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும்,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்:

இராசிபுரம் பேருந்து நிலைய இடமாற்ற நடவடிக்கையில் இராசிபுரம் நகராட்சி நிர்வாகம் ஈடுபடுவதை தடுக்க கோரியும், தற்போது அனைவருக்கும் பயனுள்ள வகையில் செயல்பட்டு வரும் இராசிபுரம் நகரின் மையப் பகுதியில் உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றாக இராசிபுரம் நகரில் இருந்து 9. கிமீ தொலைவிலுள்ள அணைப்பாளையம் ஏரிக்கருகில் படையப்பா நகரில் மீண்டும் ஒரு பேருந்து நிலையம் அமைப்பதை தடுக்க கோரி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஆகிய திரு ஈஸ்வரன் அவர்களை இராசிபுரம் மக்கள் நலப் குழுவின் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

குழுவின் தலைவர் வி. பாலு, செயலாளர் நல்வினை செல்வன், பொருளாளர் கா. முருகன், கெளரவத்தலைவர் ஜெ.ஜெயபிரகாஷ் ஆகியோர்கள் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சந்தித்து மனு அளித்தனர்.