மாற்றுத்திறனாளி குழந்தையுடன் மேடையில் நடனம்: கண்களை குளமாக்கிய தாய் | rasipuram | viral
நடனத்தை கண்டு ஏங்கிய குழந்தையை கையில் சுமந்து கொண்டு மேடையில் நடனமாடிய தாயின் வீடியோ
மாற்றுத்திறனாளி குழந்தையுடன் மேடையில் நடனம்: கண்களை குளமாக்கிய தாய்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கம் சார்பில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் 100-க்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில் மாற்றுத்திறனாளிகளின் நடனத்தை கண்டு ஏங்கிய குழந்தையை கையில் சுமந்து கொண்டு மேடையில் நடனமாடிய தாயின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது .
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளிகள் தன விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை நாமகிரிப்பேட்டை திமுக ஒன்றிய செயலாளர் கே பி ராமசாமி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
முன்னதாக மாற்றுத்திறனாளிகள் நாமகிரிப்பேட்டை சாலைகளில் ஊர்வலமாக வந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்தனர். இதைத்தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் மாற்றுத்திறனாளிகள் தங்களின் தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் நடனமாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினர் . இந்நிலையில் மற்றவர்கள் நடனம் ஆடுவதை கண்ட 3 வயது குழந்தை தனலட்சுமி (குறை பிரவசத்தில் பிறந்தால் கை,கால்கள் செயலிழந்து) ஏக்கத்தில் கை கால்களை ஆட்டவே , தன் குழந்தையின் ஆசையை நிறைவேற்று வகையில் தாய் கோமதி குழந்தையை இடுப்பில் சுமந்து கொண்டு மகிழ்ச்சி பொங்கி நடனமாடிய காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது .