எஸ் பி ஐ ATM-ல் மூதாட்டி இடம் நூதன மோசடி | 30,000 ஆயிரம் பணம் கையாடல்

இராசிபுரம்: ஸ்டேட் பாங்க் ஆஃ இந்தியா ஏடிஎம்மில் மூதாட்டி இடம் நூதன மோசடி: பணம் எடுத்து தருவதாக ஏ டி எம் ஐ மாற்றி கொடுத்து 30,000 ஆயிரம் பணம் கையாடல்

எஸ் பி ஐ ATM-ல் மூதாட்டி இடம்  நூதன மோசடி | 30,000 ஆயிரம் பணம் கையாடல்

இராசிபுரம்: ஸ்டேட் பாங்க் ஆஃ இந்தியா ஏடிஎம்மில் மூதாட்டி இடம் நூதன மோசடி: பணம் எடுத்து தருவதாக ஏ டி எம் ஐ மாற்றி கொடுத்து 30,000 ஆயிரம் பணம் கையாடல்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்த குருசாமிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மனோரஞ்சிதம் (68) என்பவரிடம் பணம் எடுத்து தருவதாக கூறி ஏடிஎம் கார்டை வாங்கி , பின்பு பணம் வரவில்லை எனக் கூறி டம்மியான ஏடிஎம் கார்டை கொடுத்துச் சென்ற மர்ம நபர் அருகிலுள்ள ஏடிஎம்மில் 30 ஆயிரம் பணத்தை எடுத்து தப்பியதாக மனோரஞ்சிதம் அளித்த புகாரின் அடிப்படையில் இராசிபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராசிபுரம் எஸ் பி ஐ ATM-ல் பணம் எடுக்க வந்த மூதாட்டியிடம் உதவி செய்வதாக ஏமாற்றி ரகசிய எண் நம்பர் சரியாக அழுத்த வில்லை மறுபடியும் சொல்லுங்கள் என கேட்டு தெரிந்து கொண்டு, பணம் எடுத்து தருவது போல் நடித்து , பணம் வரவில்லை மறுபடியும் முயற்சி செய்யுங்கள் எனக்கூறி முரளி என பெயரிட்ட போலியான ஏடிஎம் கார்டை கொடுத்து சென்றதாகவும், சற்று நேரத்தில் முப்பதாயிரம் ரூபாய் பணம் தன்னுடைய அக்கவுண்டில் இருந்து எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்ததால் அதிர்ந்து போன நான் ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக சம்பாதிக்கப்பட்ட நபர் தகவல்.

சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.