காந்தி ஜெயந்தி அன்று கள்ளச் சந்தையில் மது விற்பனை: அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு போட்ட ஆட்சியர்

இணையதளத்தில் வீடியோ பரவுவதை அறிந்த ஆட்சியர் S.உமா உடனடியாக சம்பந்தப்பட்ட கடை மீதும் விற்பனை செய்த நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க டாஸ்மாக் உயர் அதிகாரிகள், மதுவிலக்கு பிரிவு அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்

காந்தி ஜெயந்தி அன்று ஜிபே வசதியுடன் சட்டவிரோத மதுபான விற்பனை:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் பின்புறம் காந்தி ஜெயந்தி ஆன நேற்று சட்டவிரோதமாக மதுபானம் விற்கப்படுவதாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

ராசிபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்கனவே சட்டவிரோதமாக விற்பனை சந்துக்கடைகளில் நடப்பதாக புகாரின் அடிப்படையில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் தொடர்ந்து சட்டவிரோத மதுபான விற்பனை நடைபெறுவது சமூக ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது..

இணையதளத்தில் வீடியோ பரவுவதை அறிந்த ஆட்சியர் S.உமா உடனடியாக சம்பந்தப்பட்ட கடை மீதும் விற்பனை செய்த நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க டாஸ்மாக் உயர் அதிகாரிகள், மதுவிலக்கு பிரிவு அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார் .