ராசிபுரம் வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளியில் வாலி பால் போட்டி!
போட்டிகளுக்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் திருமதி .சுதா ரமேஷ் அவர்களின் தலைமையில், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்

ராசிபுரம் வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளியில் வாலி பால் போட்டி!
ராசிபுரம் வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளியில், சேலம் சகோதயாவில் உள்ள CBSE பள்ளிகளுக்கான வாலிபால் போட்டிகள் 16.11. 24 சனிக்கிழமை நடைபெற்றது.
இப்போட்டியில் 14 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் 23 அணிகள்,17 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் 17 அணிகள்,19 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் 7 அணிகள் என மொத்தம் 47 அணிகள் மோதின.564 மாணவ விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். வெற்றி விகாஸ் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் முனைவர் திரு.S.குணசேகரன் அவர்களின் வழிகாட்டுதல் படி நடைபெற்ற இப் போட்டிகளை வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளியின் தலைவர் முனைவர் திரு.G.வெற்றிச் செல்வன் அவர்களும், திருச்செங்கோடு G குளோபல் பள்ளியின் தலைமை நிர்வாகி திருமதி.ரோஷ்னி வெற்றிச் செல்வன் அவர்களும் தொடங்கி வைத்தனர்.
14 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவு,17- வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவு மற்றும் 19 - வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவு ஆகிய மூன்று பிரிவுகளுக்கான முதல் இடத்தினை சேலம் மெய்யனூர் வித்யா மந்திர் மாணவர்கள் வெற்றி பெற்றனர்.இரண்டாம் இடங்களை முறையே செந்தில் பப்ளிக் பள்ளி - சேலம்,ராயல் பப்ளிக் பள்ளி- சேலம், மற்றும் வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளி- ராசிபுரம் ஆகிய பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
போட்டிகளுக்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் திருமதி .சுதா ரமேஷ் அவர்களின் தலைமையில், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.