அரசு மருத்துவமனை தூய்மைப் பணியாளர்கள் | திடீர் தர்ணா | NAMAKKAL | STAFF | PROTEST

தூய்மை பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், மருத்துவர்கள், செவிலியர்கள், உள் நோயாளிகள், புற நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்

முறையான ஊதியம் ரூ.754 ஐ வழங்ககோரி திடீர் தர்ணா போராட்டத்தில் குவித்த அரசு மருத்துவமனை தூய்மைப் பணியாளர்கள்.

போராட்டத்தால் மருத்துவமனை துாய்மை பணியில் பாதிப்பு

நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தூய்மைப் பணியாளர், காவலாளிகள் என 216 பேர் கிரிஸ்டல் என்ற தனியார் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு நிர்ணயம் செய்த குறைந்தபட்ச ஊதியம் ரூ.754 ஐ வழங்க வேண்டும், அனைத்து ஒப்பந்த பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் வார விடுமுறை, மாத ஊதியம் குறித்த விவரங்களுடன் சம்பள ரசீது மாதந்தோறும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 200 க்கும் மேற்பட்டோர் பணிகளை புறக்கணித்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூய்மை பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், மருத்துவர்கள், செவிலியர்கள், உள் நோயாளிகள், புற நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.