கொங்கு நாடு பெரும் சலங்கை ஆட்டம் | kongunadu perum salangai aattam | Rasipuram

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோயில் ஐப்பசி தேர் திருவிழா விழாவில் நடைபெற்ற பெருஞ்சலங்கையாட்டத்தை கண்டு மகிழ்ந்த பொதுமக்கள்.

இடைவிடாத பெருஞ்சலங்கையாட்டம்!ராசிபுரத்தை அதிரவைத்த இளைஞர்கள்:

பாரம்பரியமிக்க தொன்மை மிகுந்த பெருஞ்சலங்கை ஆட்டம்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோயில் ஐப்பசி தேர் திருவிழா விழாவில் நடைபெற்ற பெருஞ்சலங்கையாட்டத்தை கண்டு மகிழ்ந்த பொதுமக்கள்.

முதல்முறையாக ராசிபுரம் மாரியம்மன் கோயில் திருவிழாவில் நாடார் சமூகத்தினரின் விழா கட்டளையில் அரங்கேறிய இந்த பெருஞ்சலங்கையாட்டம் அனைவரின் கவனத்தை ஈர்த்தது. ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் மற்றும் செல்லாண்டியம்மன்,ஆஞ்சநேயர் திருக்கோயில் ஐப்பசி திருவிழாவின் நாடார் குல சமூகத்தார்களின் கட்டளையில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்த நிலையில் சென்னிமலை தமிழன் பெருஞ்சலங்கை குழுவின் சலங்கை ஆட்டம் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

தமிழ்நாட்டில் கோவை,ஈரோடு ,நாமக்கல் கரூர் ,சேலம்,தர்மபுரி மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் கோயில் திருவிழாக்களில் ஆடப்படும் தொன்மை மிகுந்த பாரம்பரியமிக்க பெரும் சலங்கை ஆட்டம்.