ஸ்ரீ ஷீரடி சாய் பாபாவின் 106 வது சமாதி தினத்தையொட்டி அகல் விளக்கில் சாய் பாபா
ஆண்டு தோறும் விஜயதசமி தினத்தன்று ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவின் மகா சமாதி தினத்தை அவரது பக்தர்கள் கடைபிடித்து வருகின்றனர்.

நாமக்கல்லில் ஸ்ரீ ஷீரடி சாய் பாபாவின் 106 வது சமாதி தினத்தையொட்டி அகல் விளக்கில் சாய் பாபா உருவத்தை வைத்து வழிப்பட்ட பக்தர்கள்
ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கடந்த 1918-ம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று மகா சமாதி அடைந்தார். இதையடுத்து ஆண்டு தோறும் விஜயதசமி தினத்தன்று ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவின் மகா சமாதி தினத்தை அவரது பக்தர்கள் கடைபிடித்து வருகின்றனர்.
ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவின் 106-வது மகா சமாதி தினத்தையொட்டி நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள இந்திரா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ ஷீரடி சாய் தத்தா பிருந்தாவன் கோவிலில் உள்ள் சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.
இதனைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் பெண்கள் அகல் விளக்குகள் மூலம் சாய்பாபாவின் உருவத்தையும், அவரது நாமத்தையும் வைத்து ஏராளமான பக்தர்கள் வழிப்பட்டனர்.