செயற்கை வண்ணம் பூசப்பட்ட இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிப்பு

சாலையோர சில்லி சிக்கன் மற்றும் இறைச்சி கடைகளில் மாவட்ட ஆட்சியர் S.உமா உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் அருண் திடீர் ஆய்வு

செயற்கை வண்ணம் பூசப்பட்ட இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிப்பு

38 கிலோ செயற்கை வண்ணம் பூசப்பட்ட இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிப்பு

நாமக்கல் மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்படும் சாலையோர சில்லி சிக்கன் மற்றும் இறைச்சி கடைகளில் மாவட்ட ஆட்சியர் S.உமா உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் அருண் திடீர் ஆய்வு நடத்தினார்.

ஆய்வின்போது சுமார் 6 கிலோ எடை உள்ள செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்ட சில்லி சிக்கன் மற்றும் மீன் சில்லி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் 38 கிலோ ஃபுரோஷன் சிக்கன் சாதாரண குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டு இருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்து அதை பினாயில் ஊற்றி அழித்த அதிகாரிகள் 5 கடைகளுக்கும் தலா 5000 ரூபாய் அபராதம் விதித்து, எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர் . இந்த ஆய்வில் உணவு பாதுகாப்பு அலுவலர் முருகன் மற்றும் கோகுல் ஆகியோர் உடன் இருந்தனர் .