எல்லாம் கண்ணை கட்டிக் கொண்டா? முதல்முறையாக இந்திய அளவிலான புலன் உணர்வுத் திறன் போட்டி
240 மாணவ, மாணவியர் பங்கேற்பு... விரிக்ஷா புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனம் நடத்தும், முதல் முறையாக இந்திய அளவிலான புலன் உணர்வு திறன் போட்டி
இராசிபுரம்:இந்திய அளவிலான புலன் உணர்வு திறன் போட்டி.
240 மாணவ, மாணவியர் பங்கேற்பு... விரிக்ஷா புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனம் நடத்தும், முதல் முறையாக இந்திய அளவிலான புலன் உணர்வு திறன் போட்டி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஏ.கே.சமுத்திரத்தில் உள்ள ஞானமணி கல்வியில் குழுமத்தில் ஞானோதயா இன்டர்நேஷனல்மேல்நிலைப்பள்ளியில், விரிக்ஷா புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனம் நடத்தும், முதல் முறையாக இந்திய அளவிலான புலன் உணர்வு திறன் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை ஞானமணி கல்வி குழுமத்தின் தலைவர் அரங்கண்ணல், தாளாளர் மாலா லீனா மற்றும் சிறப்பு விருந்தினரும், சமூக ஊடகவியலாளருமான ராஜ் மோகன், பள்ளி முதல்வர் ரோஸிலின் பபிதா, பள்ளியின் நிர்வாக அதிகாரி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்து விழாவை துவக்கி வைத்தனர். இவ்வுலக சாதனை போட்டியில் ஞானோதயா இன்டர்நேஷனல் பள்ளியைச் சேர்ந்த, 240 மாணவ, மாணவிகள் கலந்து தன் கண்களை கட்டிக்கொண்டு வண்ணம் அறிதல், வில்வித்தை, பரதநாட்டியம், சிலம்பம், யோகா, சதுரங்கம், சைக்கிள் ஓட்டுதல், வண்ணம் தீட்டுதல் போன்ற திறன்களை செய்து காட்டி உலக சாதனை படைத்தனர். பங்கு பெற்ற மாணவ மாணவிகளுக்கு விருக்ஷா புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனம் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கி பெருமைப்படுத்தியது. #sensory #Psychology #rasipuram #namakkal #compatison