“சமூக நீதி நாள்” உறுதிமொழி
தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளையொட்டி “சமூக நீதி நாள்” உறுதிமொழி

தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளையொட்டி “சமூக நீதி நாள்” உறுதிமொழி
மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் தலைமையில் ஏற்பு.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு சட்ட மன்றத்தில் விதி எண்-110-ன் கீழ் அறிவிக்கையில், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் எனப் போற்றப்படும் ஈ.வெ.ராமசாமி அவர்களின் அறிவுச்சுடரை போற்றும் விதமாக அவரது பிறந்த தினமான செப்டம்பர் 17-ஆம் நாளை ஆண்டுதோறும் “சமூக நீதி நாள்” ஆக அனுசரிக்கப்படும் என அறிவித்தார்கள்.
அதன்படி, தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளான செம்படம்பர் 17 ஆம் நாள் அரசு விடுமுறையின் காரணமாக இன்று (15.09.2023) இராசிபுரம் வட்டம், சுஜிதா திருமண மண்டபத்தில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட தொடக்க விழாவில் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு.எ.கே.பி.சின்ராஜ் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.பெ.ராமலிங்கம் அவர்கள் (நாமக்கல்), திரு.கு.பொன்னுசாமி அவர்கள் (சேந்தமங்கலம்), திரு.ஈ.ஆர்.ஈஸ்வரன் (திருச்செங்கோடு) அவர்கள் ஆகியோர் முன்னிலையில் “சமூக நீதி நாள்” உறுதிமொழி என்ற தலைப்பில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற அன்பு நெறியையும் - ” யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பண்பு நெறியையும்,எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைப்பிடிப்பேன் ! சுயமரியாதை ஆளுமைத் திறனும் - பகுத்தறிவுப் பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும் ! சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன் ! மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன். சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன்! என்று உள்ளாட்சி பிரதிநிதிகள், பயனாளி பெருமக்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.