அக்னி குண்டத்தில் விழுந்த குழந்தைகள் | கதறிய பக்தர்கள் | நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சிகள் | rasipuram

பக்தி என்ற பெயரில் குழந்தைகளை அக்னி குண்டத்தில் இறக்குவது சரியா ? | மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடக்கும் நம் சமுதாயம் | எதை நோக்கி பயனிக்கிறது |

ராசிபுரம்:விடிய விடிய அக்னி குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய ஆயிரக்கணக்கான பக்தர்கள்.

இரண்டு குழந்தைகள் உட்பட அக்னி குண்டத்தில் விழுந்து 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்.

இராசிபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை. 1000-க்கனக்காக பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி, அலகு குத்தி, குழந்தைகளை கையில் சுமந்தபடி தீ மிதித்து நேர்த்திகடன்.

ராசிபுரம் ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில தீமிதி விழாவில் திரளான பக்தா்கள் தீ மிதித்து தங்களது நோ்த்திக் கடனைச் செலுத்தினா்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோயில் ஐப்பசி திருவிழாவானது தொடா்ந்து ஒரு மாதங்களுக்கு நடைபெறும். இதனையடுத்து, இந்த ஆண்டுக்கான திருவிழா பூச்சாட்டுதலுடன் அக்டோபர் மாதம் 24-ம் தேதி அம்மனுக்கு பூச்சாட்டுகளுடன் தொடங்கியது.

இதனையடுத்து, நாள்தோறும் பல்வேறு சமூகத்தவா்களின் கட்டளைகள் நடைபெற்று, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி, நாள்தோறும் உற்சவா் சுவாமி திருவீதி உலா மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. முக்கிய நிகழ்வுகளான கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல், கொடியேற்றம், பொங்கல் வைத்தல், அம்மை அழைத்தல், அக்கினி குண்டம் பற்ற வைத்தல் போன்றவை நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி விழா வியாழக்கிழமை அதிகாலை வெகு விமரிசையாக நடந்தது. முன்னதாக புதன் கிழமை நள்ளிரவு முதலே மஞ்சளாடை அணிந்து, வேப்பிலை ஏந்தி பக்தா்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.

கோயில் பூசாரி அக்கினி குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, தீக்குண்டம் இறங்கியதையடுத்து, தொடா்ந்து பக்தா்கள் பக்தி பரவசத்துடன் தீக்குண்டம் இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றனா்.

பக்தர்கள் அலகு குத்தியும், அக்கினி சட்டி ஏந்தியும், பெண்கள் கைக்குழந்தைகளுடனும் தீ மிதித்து வழிபாடு நடத்தினா். இதில் ராசிபுரம் சுற்று வட்டாரப் பகுதியைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று தீக்குண்டம் இறங்கினா்.

தொடந்து 9-ல் உடற்கூறு வண்டி வேடிக்கை, 11-ல் சத்தாபரணம் போன்றவை நடைபெறும். காவல்துறை மற்றும் இந்து சமய அறநிலைத்துறை சார்பாக முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தும் குழந்தைகள் உட்பட 10...க்கும் மேற்பட்டோர் அக்னி குண்டத்தில் விழுந்து படுங்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை .