BJP | அண்ணாமலை போட்டு உடைத்த ரகசியம் | போலி மதுபான ஆலையை தட்டி தூக்கிய மத்திய புலனாய்வு பிரிவு CIU | யார் அந்த திமுக பிரமுகர் ?

போலி மதுபான ஆலையை கண்டும் காணாமல் விட்ட திருச்செங்கோடு போலீசார் மீது மாவட்ட கண்காணிப்பாளர் எடுத்த நடவடிக்கை என்ன ?

கல்லா கட்டிய திருச்சங்கோடு போலீசார் : போலி மதுபான ஆலையை தட்டி தூக்கிய மத்திய புலனாய்வு பிரிவு CIU | யார் அந்த திமுக பிரமுகர்?

மறைக்கப்பட்ட செய்தியின் உண்மை நிலவரங்கள் என்ன ?

போதைப் பொருள் கடத்தலை தொடர்ந்து போலி மதுபான விற்பனையிலும் திமுக பிரமுகர் சிக்குவார்களா ?

போலி மதுபான ஆலையை கண்டும் காணாமல் விட்ட திருச்செங்கோடு போலீசார் மீது மாவட்ட கண்காணிப்பாளர் எடுத்த நடவடிக்கை என்ன ?

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை போட்டு உடைத்த ரகசியம் ...

நாமக்கல்:திருச்செங்கோடு அருகே 5400 லிட்டர் மதிப்பிலான போலி மதுபானங்கள் பறிமுதல் ஐந்து பேர் கைது மது விலக்கு மற்றும் ஆய தீர்வைத் துறையைச் சேர்ந்த மத்திய புலனாய்வுப் பிரிவை (கிரைம் இன்வஸ்டிகேஷன் யூனிஸ், CIU) சேர்ந்த அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தேவனாங்குறிச்சி ரோட்டில் உள்ள பனங்காட்டு பாளையம் பகுதியில் திமுக பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் போலி மதுபானம் உற்பத்தி செய்யப் படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து போலீசார் அதிரடி சோதனை செய்தனர்.

இங்கு ஐந்து பேர் கொண்ட கும்பல் பிடிபட்டது 5400 லிட்டர் ஸ்பிரிட், போலி லேபில்கள் மற்றும் காலி மது பாட்டில்கள், மூடிகள், வெண்ணிலா சுவையூட்டி உள்ளிட்டவை பறிமுதல், இதில் தொடர்புடையவர்கள் யார் யார் எதற்காக எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்து டிஎஸ்பி இமயவரம்பன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை.

திருச்செங்கோட்டில் உள்ள 13 அரசு மதுபான கடைகளில் மற்றும் ராசிபுரம் பரமத்தி வேலூர் கொல்லிமலை சேந்தமங்கலம் உட்பட இரவு சட்டவிரோத விற்பனைக்காக இந்த மது பாட்டில்கள் தயாரித்துக் கொண்டு செல்லப்படுவதாக முதல் கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்தது.

வட்டூர் பெத்தாம்பட்டி பகுதியை சேர்ந்த 6002 என்ற எண் கொண்ட டாஸ்மாக் மதுபானக் கடையில் பார் நடத்தி வருபவர், மற்றும் விழுப்புரம் மாவட்டம் கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த முத்துவேல், விழுப்புரம் மாவட்டம் ஓங்கூர் பகுதியை சேர்ந்த செந்தில், அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ், மற்றும் முரளி,ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பாண்டிச்சேரியில் இருந்து மதுபானம் தயாரிக்க பயன்படும் ஸ்பிரிட் ஐம்பது லிட்டர் மற்றும் 35 லிட்டர் கேன்களில் கொண்டு வந்துபோலி மதுபானம் தயாரித்து இரவு நேர விற்பனைகளுக்கு மதுபான கடைகளுக்கு கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது.

இதற்கு பயன்படுத்திய ஆல்கஹால் மீட்டர், 60 ஆயிரம் பாட்டில்கள், 40 ஆயிரம் மூடிகள் போலி லேபிள்கள் என வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு நான்கு சக்கர வாகனம், ஒரு இரண்டு சக்கர வாகனம், (Eicher van ) மினி லாரி ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

வட்டூர் பெத்தாம்பட்டியை சேர்ந்த மாதேஷ் (எ)மாதேஸ்வரன் திருச்செங்கோடு ஒன்றிய பகுதியைச் சேர்ந்த தேவனாங்குறிச்சி ரோட்டில் உள்ள பனங்காட்டுபாளையம் பகுதியில் ஒரு குடோனை வாடகைக்கு எடுத்து தமிழகம் முழுவதும் போலி மதுபானங்களை டாஸ்மாக் கடைகளுக்கு இரவு நேர விற்பனைக்காக விற்று வந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த இடம் ஒன்றிய திமுக பெண் கவுன்சிலரின் கணவருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்து வந்த கும்பலை கைது செய்த போலீசார் மேலும் இதில் தொடர்புடையவர்கள் யார்?

எங்கெல்லாம் போலி மது பாட்டில்கள் தயார் செய்துள்ளனர், என்பது குறித்து மதுவிலக்கு மற்றும்ஆய தீர்வை காவல் நிலைய ஆய்வாளர் சுல்தான் தலைமையில் தனி படை அமைத்து தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சில முக்கிய பிரமுகர்கள் பிடிபடுவார்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முக்கியமான சாலையும், பரபரப்பான மக்கள் கூடும் சாலையில் போலி மது பான ஆலை இயங்கி வந்தது, அந்தப் பகுதியில் பெருமபரபரப்பு ஏற்படுத்தியது.

கடந்த 2 ஆண்டுகளாக இந்த தொழில் இங்கு அமோகமாக நடைபெற்று இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. திருச்செங்கோடு போலீசருக்கு தெரியாமலேயா நடந்திருக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்?