யார் பெருசுன்னு அடிச்சு காட்டுங்க" போட்டி போட்டு இசை
வாத்தியக்காரர்களும் மேல காரர்களும் சிவன் பாடலுக்கு போட்டி போட்டு இசைத்தது விழாவிற்கு வந்த அனைவரையும் கவர்ந்தது.
"யார் பெருசுன்னு அடிச்சு காட்டுங்க"
என்பதைப் போல் வாத்தியக்காரர்களும் மேல காரர்களும் சிவன் பாடலுக்கு போட்டி போட்டு இசைத்தது விழாவிற்கு வந்த அனைவரையும் கவர்ந்தது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புளிப்பா குட்டை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் இன்று நடைபெற்ற சுற்றுலா பொங்கல் மற்றும் சமத்துவ பொங்கல் விழாவில் விருந்தினர்களை வரவேற்கும் நிகழ்வாகவும் பாரம்பரியத்தை போற்றும் வகையிலும் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது...
சமத்துவ பொங்கல் விழாவானது முத்தமிழர் அறிஞர் கலைஞர் அவர்கள் உருவாக்கிய சமத்துவபுரத்தில் கொண்டாடுவது மிக சிறப்பு... இந்நிகழ்ச்சியில் இதுபோல் பாரம்பரியமிக்க கலை நிகழ்ச்சிகளும்,தமிழ்நாட்டில் தமிழர்களின் மரபு ,பண்பாடு, கலாச்சார வழியில் ஒவ்வொரு தமிழர் திருநாளான பொங்கல் விழா சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட வேண்டும் என்ற நோக்கில் இந் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் எஸ். உமா தலைமை தாங்கினார்... மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழக வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் மாநிலங்களவை உறுப்பினர் கே ஆர் என் இராஜேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்ட நிலையில் விருந்தினர்கள் முன்பு மயிலாட்டம் ஒயிலாட்டம் சிவன் பார்வதி வேடம் ஆகிய வேடங்களில் கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
#festivel #rasipuram #namakkal #pongalfestival #pongalgames #pongalparisu2024 #pongalcelebration #pongalsong #pongalband #viralsong