நாமக்கல்:பேரூராட்சியுடன் கிராம ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு | கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அக்கிராம ஊராட்சியை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்டோர் கிராம மக்கள் ஒன்று கூடி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

நாமக்கல்:பேரூராட்சியுடன் கிராம ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு | கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

பேரூராட்சியுடன் கிராம ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு | கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

மோகனூர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த அரசு முடிவு.பேரூராட்சியுடன் கிராம ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு. நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ராசிபாளையம், குமரிபாளையம், பேட்டப்பாளையம், மணப்பள்ளி ஆகிய ஊராட்சிகளை மோகனூர் பேரூராட்சியுடன் இணைத்து நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் மோகனூர் பேரூராட்சியுடன் கிராம ஊராட்சிகளை இணைந்தால் குடிநீர் வரி, சொத்து வரி உயர்த்தப்படும், 100 நாள் வேலை வாய்ப்புத்திட்டம் பாதிக்கப்படும் என்பதால் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அக்கிராம ஊராட்சியை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்டோர் கிராம மக்கள் ஒன்று கூடி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில் மோகனூர் பேரூராட்சியில் கிராம ஊராட்சிகளை இணைக்கும் திட்டத்தை கைவிடாவிட்டால் வரும் 20ஆம் தேதி நாமக்கல் பூங்கா சாலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்கும் ஆர்ப்பாட்டத்தில் கிராம மக்கள் கலந்து கொள்ள உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.