புதிய வழிதடத்தில் பேருந்து இயக்க நாமக்கல் ஆட்சியர் உத்தரவு | மனம் மகிழ்ந்து. நன்றி சொன்ன பொற்றோர்கள்

பல ஆண்டு போரட்டத்திற்க்கு பிறகு செவிசாய்த்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் S.உமா அவர்களுக்கு அப்பகுதி மக்கள், பெற்றோர்கள் மாணவ, மாணவிகள் மனம் மகிழ்ந்து நன்றி தெரிவித்தனர்.

புதிய வழிதடத்தில் பேருந்து இயக்க நாமக்கல் ஆட்சியர் உத்தரவு | மனம் மகிழ்ந்து. நன்றி சொன்ன பொற்றோர்கள்

மாணவ, மாணவிகளின் நலன் கருதி புதிய வழிதடத்தில் பேருந்து இயக்க ஆட்சியர் உத்தரவு: மனம் மகிழ்ந்து நன்றி சொன்ன பொற்றோர்கள்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு. தாலுகா, மல்லசமுத்திரம் பகுதியில் குருக்கலாம்பாளையத்திலிருந்து புதிய வழித்தட பேருந்தை போக்குவரத்து துறை இயக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கடந்த 12.07.2024 அன்று காளிப்பட்டி அருகே கவன ஈர்ப்பு ஆர்பாட்டமானது நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் குருக்கலாம்பாளையம், அம்மாபட்டி, ஐக்கம்மா. தெரு,'கோணங்கிபாளையம் பகுதி மக்கள் நல கூட்டமைப்புடன் இணைந்து, திவிக பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள், பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சார்ந்த பொதுமக்கள், மாணவ,மாணவியர்கள். கலந்து கொண்டு புதிய வழித்தடத்தில் பேருந்துகளை இயக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

மாணவ, மாணவிகள் ஆர்பாட்டம் குறித்து அறிந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் S.உமா நேரடியாக கள ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட கிராம பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளை அழைத்து பேசினார். கிராமத்தில் வசிக்கும் மாணவ, மாணவிகள் கல்வியை கற்க பேருந்து வசதி அவசியம் என்பதை. உணர்ந்து சம்பந்தப்பட்ட. போக்குவரத்து துறை அதிகாரிகளை அழைத்து புதிய வழித்தடத்தில் மாணவ, மாணவிகளின் நலன் கருதி உடனடியாக அரசு பேருந்தை இயக்க உத்திரவிட்டார்.

பல ஆண்டு போரட்டத்திற்க்கு பிறகு செவிசாய்த்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் S.உமா அவர்களுக்கு அப்பகுதி மக்கள், பெற்றோர்கள் மாணவ, மாணவிகள் மனம் மகிழ்ந்து நன்றி தெரிவித்தனர்.