பெரம்பலூரில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு

மத்திய அரசு ராணுவத்திற்கு வீரர்களை தேர்வு செய்வதற்காக அக்னிபாத் என்னும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்காக பெரம்பலூர்,கரூர்,அரியலூர்,திருச்சி,கன்னியாகுமரி உள்ளிட்ட 16 மாவட்டங்களை சேர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஜூலை 1 முதல் 5ம் தேதி வரையில் நடைபெறும் இந்த முகாமை
மாவட்ட ஆட்சியர் கற்பகம் தொடங்கி வைத்தார். முதல்நாள் 700 வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதிகாலை 3 மணிக்கு தொடங்கிய முகாமில் பங்கேற்க வீரர்கள் காத்திருந்தனர். வீரர்கள் உடல்தகுதி, மருத்துவ தகுதி உள்ளிட்ட பல்வேறு திறமைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். அழைப்பு கடிதம் அனுப்பபட்டவர்களில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
வீரர்களை தேர்வு செய்யும் பணியில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். முகாமில் திருச்சி மண்டல அலுவலர் கர்ணல் தீபாகுமார்,மருத்துவ அலுவலர் டாக்டர் முதித்துப் ரெட்டி, மேஜர் நீலம் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.