ராசிபுரம் வநேத்ரா முத்தாயம்மாள் கல்வி நிறுவனங்கள் நடத்தும், 'நிகரில்லா நாமக்கல் போட்டி

ராசிபுரம் வநேத்ரா முத்தாயம்மாள் கல்வி நிறுவனங்கள் நடத்தும், 'நிகரில்லா நாமக்கல் ' போட்டி.. 3 லட்சம் ரொக்கப் பரிசு அறிவிப்பு...

இராசிபுரம்:ராசிபுரம் வநேத்ரா முத்தாயம்மாள் கல்வி நிறுவனங்கள் நடத்தும், 'நிகரில்லா நாமக்கல் ' போட்டி...

3 லட்சம் ரொக்கப் பரிசு அறிவிப்பு...

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வநேத்ரா முத்தாயம்மாள் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, 30 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, நாமக்கல் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் 'நிகரில்லா நாமக்கல்' என்ற தலைப்பில் கோலப்போட்டி, புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தல், ஆன்லைன் கேள்வி - பதில் என 3 பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது.

இப்போட்டிக்கான தொடக்க விழா வரும் 10ம் தேதி கல்லூரியில் தொடங்கி, வரும் 21ம் தேதி வரை ஆன்லைன் வழியாகவே நடக்கிறது. இதில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து வயதினரும் பங்கு பெறலாம். ஒருவர் எத்தனை முறை வேண்டும் என்றாலும் போட்டிகளில் பங்குபெறலாம். வரும் மார்ச் 2ம் தேதி கல்லூரியில் கோலப்போட்டி மற்றும் நிறைவு விழா நடக்கிறது. அப்போது தேர்வு குழுவால் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படும். கோலப்போட்டியில் முதல் பரிசு 15 ஆயிரம், 2ம் பரிசு 10 ஆயிரம், 3ம் பரிசு 7500, சிறப்பு பரிசாக 2 பேருக்கு தலா 4 ஆயிரம் வழங்கப்படும். போட்டோகிராப் போட்டியில் முதல் பரிசு 15 ஆயிரம், 2ம் பரிசு 10 ஆயிரம், 3ம் பரிசு 7500, சிறப்பு பரிசாக 2 பேருக்கு தலா 4 ஆயிரம் வழங்கப்படும். வீடியோகிராப் போட்டியில் முதல் பரிசு 20 ஆயிரம், 2ம் பரிசு 15 ஆயிரம், 3ம் பரிசு 7500, சிறப்பு பரிசாக 2 பேருக்கு தலா 5 ஆயிரம் வழங்கப்படும். ஆன்லைன் கேள்வி - பதில் போட்டியில், முதல் 40 பேருக்கு தலா 3 ஆயிரம் வழங்கப்படும். மொத்தமாக 3 லட்சம் ரொக்கம் வழங்கப்படுகிறது.

மேலும், போட்டிக்கான அனைத்து தகவலும் இதற்காக பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்டுள்ள https://nigarillanamakkal.com/ என்ற இணையதளம் சென்று தெரிந்துகொள்ளலாம்.

இதுகுறித்து ராசிபுரம் வநேத்ரா முத்தாயம்மாள் கல்வி நிறுவனங்களின் செயல் இயக்குநர் ச.மஞ்சு கூறுகையில், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு தொழில்கள் மற்றும் பல கல்வி நிறுவனங்கள் மூலம் மாநில பொருளாதாரத்திற்கு ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிப்பதே எங்கள் நிறுவனத்தின் நோக்கமாகும். "நிகரில்லா நாமக்கல்" எனும் நிகழ்வின் வழியாக நாமக்கல்லை மையமாக வைத்து போட்டிகளை நடத்துகிறோம். இந்த போட்டிகளில் அனைவரும் கலந்து கொண்டு, நமது மாவட்டத்தின் பெயரை பெருமைப்படுத்துவதற்காகவும், திறன்வாய்ந்தவர்களை ஊக்குவிப்பதற்காகவும் 3 லட்சம் ரொக்கப்பரிசுகளை வழங்க உள்ளோம் என்றார்.

தொடர்ந்து செயல் இயக்குநர் ச.மஞ்சு தலைமையில் நிகரில்லா நாமக்கல் குழுவினர் இணைந்து, நிகழ்விற்கான இலட்சினையை வெளியிட்டனர். முத்தாயம்மாள் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூசன்-னின் முதல்வர் முனைவர் இரா.மணி நன்றியுரை ஆற்றினார்.