'கபடி'யில் கலக்கிய இல்லத்தரசிகள் | LADIES | KABADDI | PONGAL

அரசு சார்பில் சமத்துவ புரத்தில் நடந்த உற்சாக பொங்கல் விழா... ஆண்களுக்கு இணையாக 'கபாடி'யில் கலக்கிய இல்லத்தரசிகள்...

இராசிபுரம்:பொங்கல் விழாவில் Vibe - ஆன மாவட்ட ஆட்சியர்...

அரசு சார்பில் சமத்துவ புரத்தில் நடந்த உற்சாக பொங்கல் விழா... ஆண்களுக்கு இணையாக 'கபாடி'யில் கலக்கிய இல்லத்தரசிகள்...

சுற்றுலா பொங்கல் மற்றும் சமத்துவ பொங்கல் விழாவில் கயிறு கட்டி இழுத்தல் பானை உடைத்தல் கபடி போட்டிகளில் பெண்களுடன் சேர்ந்து கொண்டாடிய மாவட்ட ஆட்சியர் எஸ். உமா.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் கார்கூடல்பட்டி ஊராட்சி, பிலிப்பாகுட்டை பகுதியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றன.

இங்கு, தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில், 'சுற்றுலா பொங்கல் மற்றும் சமத்துவ பொங்கல் - 2024' விமர்சியாக கொண்டாப்பட்டது. இதில், பல்வேறு சமுகத்தை சேர்ந்த 50 -க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றாக இணைந்து பொங்கல் வைத்து சிறப்பித்தனர்.

இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் எஸ். உமா தலைமை வகித்தார்.

ராசிபுரம் சட்டமன்ற உறுப்பினரும், வனத்துறை அமைச்சருமான மதிவேந்தன்,மாநிலங்களவை உறுப்பினர் K.R.N.இராஜேஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், பானை உடைக்கும் போட்டி நடைபெற்றது.

இதில், கலந்துகொண்ட சமத்துவ பெண் ஒருவரின் கண்ணில் துணி சரியாக கட்டியுள்ளதா என கலெக்டர் உமா சரிபார்த்த பின்னர் அவரை சுத்திவிட்டார். அதேபோல், மயிலாட்டம், ஒயிலாட்டம், சிவன், பார்வதி வேடம், உரியடித்தல், இசை நாற்காலி மற்றும் கயிறு இழுத்தல் நிகழ்ச்சி விமர்சியாக நடந்தது. தொடர்ந்து பெண்கள் கபாடி போட்டி நடந்தது. ஆண்களுக்கு நிகராக கபாடி விளையாடி தங்களின் வீரத்தை வெளிபடுத்தினர்.

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.இராமசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) தங்கவேல், திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் பிரியா, மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமதி எஸ்.கோகிலா, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா, மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் அபராஜிதன், உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.