தமிழக பிஜேபி இளைஞரணி சமூக ஊடக பொறுப்பாளர் கைது
ராகுல் காந்தி குறித்து அவதூறு பரப்பிய பாஜக இளைஞரணி சமூக ஊடகப் பொறுப்பாளர் கைது

இராசிபுரம்: ராசிபுரத்தில் அதிகாலை 2 மணி அளவில் தமிழக பாஜக இளைஞரணி சமூக ஊடக பொறுப்பாளர் பிரவின்ராஜை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் முத்துக்காளிப்பட்டியைச் சேர்ந்தவர் பிரவீன்ராஜ்;தமிழக பாஜக இளைஞரணி சமூக ஊடக பொறுப்பாளராக உள்ளார்.
இன்று அதிகாலை 2 மணி அளவில் நாமக்கல் ராசிபுரத்தில் அவரது வீட்டில் போலீசார் கைது செய்துள்ளனர். இவர் தனது x ட்விட்டர் தளத்தில் ஆகஸ்டு மாதம் 10ம் தேதி #அன்று தன் தங்கையே தன் கையை உதறும் அளவுக்கு, கீழ் தனமாக நடந்து கொண்ட "அயோக்கியன்" ராகுல் தான். #இன்று flying kiss கொடுக்கும் அளவுக்கு போய் இருக்கான். இவன் கூட்டணில இருந்துட்டு மணிப்பூருக்கு நீதி கேட்குற கருணாநிதிஸ் முதல்ல.....அவன் தங்கைக்கு நீதி கேளுங்கடா, என பதிவிட்டுள்ளார். இந்நிலையில், பிரவீன் ராஜை இன்று அதிகாலை 2 மணிக்கு போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து x ட்விட்டர் பக்கத்தில், அதிகாலை 2 மணிக்கு கதவை தட்டி, பிறகு கதவை உடைக்க முற்ப்படும் சிலர். கேட்டால் cyber crime. ஆனால் தான் காமிக்கும் Id card ஐ உள்ளூர் மக்கள் ஃபோட்டோ எடுப்பது குற்றம் என சொல்லி மிரட்டல் . Protocal படி Local போலீஸும் உடன் இல்லை.வீழ்வேன் என நினைத்தாயோ? @mkstalin என பிரவின்ராஜ் பதிவிட்டுள்ளார்.