தமிழக பிஜேபி இளைஞரணி சமூக ஊடக பொறுப்பாளர் கைது

ராகுல் காந்தி குறித்து அவதூறு பரப்பிய பாஜக இளைஞரணி சமூக ஊடகப் பொறுப்பாளர் கைது

தமிழக பிஜேபி இளைஞரணி சமூக ஊடக பொறுப்பாளர் கைது
ராகுல் காந்தி குறித்து அவதூறு பரப்பிய பாஜக இளைஞரணி சமூக ஊடகப் பொறுப்பாளர் கைது

இராசிபுரம்: ராசிபுரத்தில் அதிகாலை 2 மணி அளவில் தமிழக பாஜக இளைஞரணி சமூக ஊடக பொறுப்பாளர் பிரவின்ராஜை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் முத்துக்காளிப்பட்டியைச் சேர்ந்தவர் பிரவீன்ராஜ்;தமிழக பாஜக இளைஞரணி சமூக ஊடக பொறுப்பாளராக உள்ளார்.

இன்று அதிகாலை 2 மணி அளவில் நாமக்கல் ராசிபுரத்தில் அவரது வீட்டில் போலீசார் கைது செய்துள்ளனர். இவர் தனது x ட்விட்டர் தளத்தில் ஆகஸ்டு மாதம் 10ம் தேதி #அன்று தன் தங்கையே தன் கையை உதறும் அளவுக்கு, கீழ் தனமாக நடந்து கொண்ட "அயோக்கியன்" ராகுல் தான். #இன்று flying kiss கொடுக்கும் அளவுக்கு போய் இருக்கான். இவன் கூட்டணில இருந்துட்டு மணிப்பூருக்கு நீதி கேட்குற கருணாநிதிஸ் முதல்ல.....அவன் தங்கைக்கு நீதி கேளுங்கடா, என பதிவிட்டுள்ளார். இந்நிலையில், பிரவீன் ராஜை இன்று அதிகாலை 2 மணிக்கு போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து x ட்விட்டர் பக்கத்தில், அதிகாலை 2 மணிக்கு கதவை தட்டி, பிறகு கதவை உடைக்க முற்ப்படும் சிலர். கேட்டால் cyber crime. ஆனால் தான் காமிக்கும் Id card ஐ உள்ளூர் மக்கள் ஃபோட்டோ எடுப்பது குற்றம் என சொல்லி மிரட்டல் . Protocal படி Local போலீஸும் உடன் இல்லை.வீழ்வேன் என நினைத்தாயோ? @mkstalin என பிரவின்ராஜ் பதிவிட்டுள்ளார்.