அரசு கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளித்து, பெண்கள் கல்வி பெறுவதை தொடர்ந்து உறுதி செய்து வருகிறது

தமிழ்நாடு அரசு கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளித்து, பெண்கள் கல்வி பெறுவதை தொடர்ந்து உறுதி செய்து வருகிறது என்று மாநில வனத்துறை அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன்

அரசு கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளித்து,  பெண்கள் கல்வி பெறுவதை தொடர்ந்து உறுதி செய்து வருகிறது
தமிழ்நாடு அரசு கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளித்து, பெண்கள் கல்வி பெறுவதை தொடர்ந்து உறுதி செய்து வருகிறது என்று மாநில வனத்துறை அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன்

தமிழ்நாடு அரசு கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளித்து, பெண்கள் கல்வி பெறுவதை தொடர்ந்து உறுதி செய்து வருகிறது என்று மாநில வனத்துறை அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அண்ணா சாலையில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட மாநில வனத்துறை அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன், ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப்பள்ளி ராசிபுரம் சுவாமி சிவானந்தா சாலை அரசு மேல்நிலைப்பள்ளி ராசிபுரம் தூய இருதய ஆர்சி உயர்நிலைப்பள்ளி ஆகிய 277 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

தொடர்ந்து தேசிய பசுமை படை சார்பில் இராசிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை அமைச்சர் மா. மதிவேந்தன், மக்கள் பிரதிநிதி உள்ளிட்டோர் நட்டு வைத்தனர். முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பேசிய மாநில வனத்துறை அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன், தமிழ்நாட்டில் அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் கல்வித்துறைக்கு மாநில அரசு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதிலும் பெண் கல்விக்கு உயர் முக்கியத்துவம், முன்னுரிமை அளித்து செயல்படுத்துகிறது. பெண்களுக்கான கல்வி இன்று எளிதில் கிடைக்கும் வகையில் திட்டங்கள் எளிமையாக்கப்பட்டுள்ளன. பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம் உள்ளது. பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கலைஞர் உரிமைத் தொகை, விடியல் பயணம் போன்ற திட்டங்கள் பெரிதும் பயனுள்ளதாக உள்ளன. இதுபோன்ற திட்டங்களை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார். கொரோனா காலத்தில் மாணவ மாணவிகளின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தன்னார்வலர்களைக் கொண்டு இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் போன்ற திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. கொரோனா காலத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டது. மேலும், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க அறிஞர் அண்ணா நூலகம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் ஆகியவை பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளன. போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்காக உங்கள் நூலகம் உங்கள் கையில் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது என்றும் அமைச்சர் மா. மதிவேந்தன் நிகழ்ச்சியில் பேசினார். இந்த நிகழ்ச்சியில், இராசிபுரம் நகர மன்ற தலைவர் முனைவர் திருமதி ஆர் கவிதா சங்கர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் என்.ஆர். சங்கர், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ஆர்.எம். துரைசாமி, இராசிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மா. குணசேகரன், சி. வரதராஜன், மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.