மீண்டும் பிறவா நிலை பெற பரிகாரம் | “ஓம் நமச்சிவாய” என்னும் ஆத்ம சக்தி வாய்ந்த சிவ மந்திரம் | omnamachivaya

பிறவா நிலையை வேண்டுபவர்கள், எந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்?

மீண்டும் பிறவா நிலை பெற பரிகாரம் | “ஓம் நமச்சிவாய” என்னும் ஆத்ம சக்தி வாய்ந்த சிவ மந்திரம் | omnamachivaya

இவ்வுலகில் மனிதனாக பிறந்த ஒருவன் ஏழு பிறவிகள் எடுப்பதாக சில ஆன்மீக நூல்கள் கூறுகிறது. கர்மம் தீரும் வரை பிறப்புகள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. ஆனால் ஒரு பிறவியிலேயே நாம் படும் பாட்டை பார்த்தால் மறுபிறவி கேட்க தோன்றுமா? போதும்டா சாமி, மீண்டும் எனக்கு மனிதனாக பிறக்கவே கூடாது, பிறவா வரம் வேண்டும் என்பவர்கள் தான் நம்மில் ஏராளம். இப்படி பிறவா நிலையை வேண்டுபவர்கள், எந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம். மனிதனாக பிறந்தால் ஒவ்வொருவரும் தங்களுடைய கர்ம வினையானது முடியும் வரை பலன்களை அனுபவிக்க வேண்டும் என்பது தான் நியதி, அதனால் தான் மீண்டும் மீண்டும் அவன் பிறவி எடுப்பதாக கூறப்படுகிறது. முற்பிறவியில் செய்த பாவங்களுக்கான தண்டனைகளை அடுத்தடுத்த பிறவிகளில் தொடர்ந்து அனுபவித்து கொண்டே இருக்க வேண்டும். அந்த பிறவியிலும் பாவம் செய்தால், மீண்டும் பிறவி எடுக்க வேண்டும், இது தொடர்கதை ஆகும்..

எப்பிறவியில் பாவம் செய்யாமல், நேர்வழியில் பக்தி மார்க்கத்துடன் இணைந்து இருக்கிறானோ, அப்பிறவியில் அவனுடைய பிறவி முடிவடைகிறது. தவறு செய்தால் யாருக்கும் தெரியாது என்று நினைக்க கூடாது. இறைவன் நம்மை பார்த்து கொண்டு இருப்பார் என்று தெரிய வேண்டும். இறைவனின் விழிகளில் இருந்து நம்மால் தப்பிக்க முடியாது. யாரிடம் வேண்டுமானாலும் நீங்கள் உங்களை நல்லவர்களாக காட்டிக் கொள்ளலாம், ஆனால் இறைவனுடைய கண்களைப் பார்த்து உங்களால் நான் நல்லவன், நான் என்ன தவறு செய்தேன்? எனக்கு ஏன் இந்த பிரச்சனை என்று கேட்க முடியுமா? அப்படி நீங்கள் கேட்பவராக இருந்தால், உங்கள் மனசாட்சிப்படி நீங்கள் நடப்பவராக இருந்தால் அடுத்த பிறவி உங்களுக்கு கிடையாது. மறுபிறவி எடுக்க கூடாது, இந்த பிறவியே போதும், நான் அனுபவித்ததெல்லாம் போதும் என்று நினைப்பவர்கள், 108 வில்வ இலைகளை எடுத்து அதில் “ஓம் நமச்சிவாய” என்னும் ஆத்ம சக்தி வாய்ந்த சிவ மந்திரத்தை எழுதி, லிங்கத்திற்கு 108 முறை அர்ச்சனை செய்து வர வேண்டும். வீட்டில் லிங்கம் வைத்திருப்பவர்கள், வீட்டிலேயே இந்த அர்ச்சனையை செய்யலாம். கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்ய நினைப்பவர்கள், கோவிலுக்கு சென்றும் லிங்கத்திற்கு 108 முறை வில்வார்ச்சனை செய்து வழிபடலாம்..

48 பிரதோஷ நாட்களில் சிவபெருமானை தரிசிக்க வேண்டும். சிவபெருமானுக்கு செய்யும் பூஜை மற்றும் அபிஷேக அலங்காரங்களில் கலந்து கொள்ள வேண்டும். கண் குளிர சிவபெருமானை தரிசித்து, மனதார “இப்பிறவி போதும், இனி பிறவா நிலை வேண்டும்” என்று பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும். சிவாலயங்களுக்கு பிரதோஷ தினத்தன்று பால், தயிர் போன்ற அபிஷேகத்துக்கு உரிய பொருட்களை உங்களால் முடிந்தவரை தானம் செய்ய வேண்டும்.

சிவனுடைய வாகனமாக இருக்கக் கூடிய ரிஷபத்திற்கு, அதாவது காளை மாட்டிற்கு நீங்கள் அருகம்புல்லை கொடுக்க வேண்டும். இப்படி 48 பிரதோஷங்கள் காளை மாட்டிற்கு அருகம்புல் தானம் செய்பவர்களுக்கு, பிறவா நிலை வரும். 108 முறை வில்வார்சனை செய்ய வேண்டியதும் 48 பிரதோஷ நாட்களில் தான். இப்படி தொடர்ந்து ஒவ்வொரு பிரதோஷ நாட்களிலும், 48 பிரதோஷ இப்பரிகாரங்களை செய்து வந்தால், அப்பிறவியிலேயே அவர்களுக்கு மோட்சம் பக்தி மூலமாக உண்டாகும், அதனால் அடுத்த பிறவி என்பது அவர்களுக்கு கிடையாது என்பது ஐதீகம்.