அரசு பஸ் கண்டக்டரால் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்...
ராசிபுரத்தில் அரசு பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்த்த மூன்று பேரை அரசு பேருந்து நடத்துனர் தாக்கியதாக அரசு மருத்துவமனையில் அனுமதி...
ராசிபுரத்தில் அரசு பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்த்த மூன்று பேரை அரசு பேருந்து நடத்துனர் தாக்கியதாக அரசு மருத்துவமனையில் அனுமதி...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசு போக்குவரத்து மனைக்கு சொந்தமான ராசிபுரம் டு காளிப்பட்டி செல்லும் தடம் எண் 10 என்ற பேருந்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த + 2 பள்ளி மாணவி உட்பட மூன்று பேர் இராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஒரு வழிப்பாதையில் உள்ள பெரியசாமி டீக்கடை பேருந்து நிறுத்தத்திற்கு செல்வதற்கு பயணித்துள்ளனர்... இந்நிலையில் அண்ணாதுரை பேருந்து படிக்கட்டில் நின்று பயணம் செய்து வந்ததாக கூறப்படுகிறது...
இதனால் ஆத்திரம் அடைந்த பேருந்து நடத்துனர் படிக்கட்டில் நிற்கக்கூடாது மேலே வா என கூறிய நிலையில் அவர் நடத்துனரை தகாத வார்த்தையில் திட்டிதாக கூறப்படுகிறது... இதனால் ஆத்திரம் அடைந்து நடத்தினர் "நீ படிக்கட்டில் இருந்து விழுந்து செத்தா என் குடும்பம் தாண்டா தாலி அறுக்கணும் என கோபமாக பேசி உள்ளார்...
இதனை அருகில் இருந்து கவனித்த அண்ணாதுரையின் மனைவி வெண்ணிலா நான் உயிரோடு இருக்கும்போது எதுக்குடா தாலி அறுகானும் என நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கையில் இருந்த சில்வர் பாத்திரத்தால் தாக்கியதாக பஸ்ஸில் பயணம் செய்த பயணிகள் வாக்கி மூலம் அளித்தனர்.
எதிர்பாராத விதமாக வெண்ணிலா தன்னை தாக்குவதை கண்டு ஆத்திரம் அடைந்த பஸ் நடத்துனர் வெங்கடாசலம் சில்வர் பாத்திரத்தை தடுத்து பிடுங்கிய போது அவருக்கு கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்தம் போக்கு ஏற்பட்டது. இதில் சம்பவத்தை அருகில் இருந்து பார்த்த அண்ணாதுரையின் அண்ணன் மகள் இசைஞானி தகாரறு செய்யாதீர்கள் என பாத்திரத்தை பிடுங்கும் முயற்சி போது இடது கையில் வெட்டுகாயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது...
இந்நிலையில் அரசு பேருந்து நடத்துனர் தங்களை தாக்கியதாக கூறி ராசிபுரம் அரசு மருத்துவமனையில் மூன்று பேரும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பஸ் நடத்துனர் அதிக ரத்தப்போக்கு காரணமாக மயக்கம் அடைந்ததால் அவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் ... இருவரையும் வழக்கு வேண்டாம் சமாதானமாக செல்லும்படி காவல் துறையினர் அறிவுறுத்தியும் இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதால் வழக்கு பதிய வேண்டிய கட்டாய நிலைக்கு ராசிபுரம் காவல்துறையினர் தள்ளப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து அரசு போக்குவரத்து பணிமனையின் அதிகாரிகள் கூறுகையில்: தங்களின் ஊழியர்கள் மீது எந்த தவறும் இல்லாத போது பொதுமக்கள் இப்படி அநாகரிகமாக நடப்பது அப்பாவி ஊழியர்களின் வாழ்க்கையை பாதிக்கிறது என வேதனையுடன் தெரிவித்தனர்...
© மேலும் இதில் பதிவிடும் தகவ்கள் அனைத்தும் பல இணையதளத்தில் கிடைக்கும் அல்லது சேர்க்கப்பட்டுள்ள விவரங்கள் மட்டுமே, பிழைகள் அல்லது அச்சு பிழைகள் இருக்கலாம். இந்தச் சேவையை நம்பினால் அல்லது இந்த villigal.com வழியாகக் கிடைக்கும் எந்த ஒரு கருத்தையும் ஏற்று நீங்கள் முடிவெடுத்தால், உங்களுடைய சொந்த முயற்சியில்தான் அதைச் செய்கிறீர்கள். இந்த தளத்தில் சொல்லப்பட்ட தகவல், தயாரிப்புகள், மற்றும் சேவைகள் சம்பந்தப்பட்ட பிற பிரச்சனைகளை நீங்கள் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளவேண்டும். நீங்கள் சுயமாக எடுக்கும் முடிவிற்கு இந்த வலைத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.