நாமக்கல் நைனாமலை ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில்லில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
சுமார் 3,600 படிக்கட்டுகளைக் கடந்து, கரடு, முரடனான பாதையில் பக்தர்கள் நடந்துசென்று, மலை மேல் உள்ள பெருமாளைத் தரிசிக்கச் செல்வார்கள்.

புரட்டாசி 3-வது சனிக்கிழமை நாமக்கல் நைனாமலை ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில்லில் குவிந்த பக்தர்கள் கூட்டம்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுள் ஒன்று நைனாமலை ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில். குவலயவல்லி தாயாருடன் மலை மீது அமர்ந்தபடி பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இந்தக் கோயிலுக்குத் தமிழகம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் வந்து போகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் இக்கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகப்படியாக இருக்கும்.
சுமார் 3,600 படிக்கட்டுகளைக் கடந்து, கரடு, முரடனான பாதையில் பக்தர்கள் நடந்துசென்று, மலை மேல் உள்ள பெருமாளைத் தரிசிக்கச் செல்வார்கள். அதன்படி புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு பெருமாளுக்குச் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது, பக்தர்கள் பெருமாளை தரிசிக்க அதிகாலை முதலே மலைக்கு சென்று வழிப்பட்டு வருகின்றனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை வசதிகள், மருத்துவ வசதிகளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது மலை மீது செல்ல முடியாதோருக்காக அடிவாரப் பகுதியில் பந்தல் அமைக்கப்பட்டு உற்சவர் சிலை வைத்து பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க போலீஸார் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.