திமுக தேர்தல் வாக்குறுதிகளில் என்ன சொன்னோமோ அதை செய்து கொண்டிருக்கிறோம் - கே ஆர் என். இராஜேஷ்குமார் பெருமிதம்
நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து சாலை வசதி இன்று தவித்த போதமலை மலைவாழ் மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சாலை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்
இராசிபுரம்:சுதந்திரம் அடைந்த பிறகும் சாலை வசதியின்றி அல்லல் பட்ட மலைவாழ் மக்கள்...
மலைவாழ் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சாலை அமைக்கும் பணிகளுக்கு இன்று தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்...
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட போதமலை கீழூர், மேலூர், கெடமலையை இணைக்கும் வகையில் ரூ. 140 கோடி மதிப்பீட்டில் 31 கி.மீ சாலைப் பணிக்கு தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
இதையொட்டி, நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில்,ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் உமா, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் KRN.இராஜேஸ்குமார், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ கே பி சின்ராஜ் பங்கேற்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1100 மீட்டர் உயரத்தில் கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக போதமலை கீழூர் ஊராட்சி அமைந்துள்ளது. ஊராட்சியில் 1202 வாக்காளர்கள் உள்ளனர் .
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் இம்மலைப்பகுதி குக்கிராமங்களுக்கு இந்நாளதுவரை சாலை வசதி இல்லை. சீரற்ற மற்றும் கரடுமுரடான மலைப்பாதையில் நடைபயணமாகவே சென்று வருகின்றனர்.
தங்களுக்கான அவசர மருத்துவ உதவிக்கு சுமார் 11 கி.மீ நடைபயணமாக மலைப்பகுதியில் நடந்து வந்து பின்பு அடிவாரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள இராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்கின்றனர். அவ்வாறு செல்லும்போது முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களை "டோலி" கட்டி தூக்கி வந்தே சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. இதனால் முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் உரிய காலங்களில் சிகிச்சை பெறமுடியாமல் உயிரிழக்கும் ஆபத்தை எதிர்நோக்குகின்றனர். சில நேரங்களில் விஷ பாம்புகள் கடிக்கும் நேர்வில் சிகிச்சைக்கு இராசிபுரம் வர வேண்டியுள்ளதால், கால தாமதத்தின் காரணமாக உயிரிழப்பு அதிகமாக ஏற்படுகிறது. இவ்வூராட்சியில் கீழூர் குக்கிராமத்தில் GTR (Government Tribal Residential) ஆரம்ப பள்ளி உள்ளது. இதில் 5 குழந்தைகள் படித்து வருகின்றனர். இதில் 5 குழந்தைகள் படித்து வருகின்றனர். மேலும் அங்கன்வாடி கெடமலையில் ஒன்றும், கீழூரில் ஒன்றும் செயல்படுகிறது. இவ்வூராட்சியில் உள்ள மாணவர்கள் 6.ஆம் வகுப்பு முதல் உயர்கல்வி வரை பயில அருகில் உள்ள இராசிபுரத்திற்கே சென்று வரவேண்டியுள்ளது. மலையிலிருந்து தினமும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்றுவருவது இயலாத நிலையில் மாணவர்கள் படிப்பை ஐந்தாம் வகுப்பிற்கு மேல் நிறுத்திவிடுகின்றர். பொது விநியோக கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கிட கீழூர் குக்கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்கள் நடைபயணமாக 10 கிமீ பயணம் செய்து வெண்ணந்தூர் வட்டாரத்திற்குட்பட்ட கல்லாங்குளம் கிராமத்திற்கு வந்து வாங்கி செல்கின்றனர், மேலூர் குக்கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்கள் நடைபயணமாக 12 கிமீ பயணம் செய்து சேலம் மாவட்டம் பனைமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம் குள்ளப்பநாய்க்கன்புதூர் கிராமத்திற்கு வந்து வாங்கி செல்கின்றனர், கெடமலை குக்கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்கள் நடைபயணமாக 7 கிமீ பயணம் செய்து புதுப்பட்டி பேரூராட்சி நியாய விலைக்கடைக்கு சென்று தங்களின் அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்கின்றனர். கீழூர் ஊராட்சியில் உள்ள மூன்று குக்கிராமங்களில் இந்து மலையாளி வகுப்பைச்சார்ந்த 258 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் காலங்காலமாக இங்கு சிறுதானியங்களை பாரம்பரிய முறையில் பயிரிட்டு வருகின்றனர். இங்கு பயிரிடப்படும் சிறுதானியங்கள் அதிக தரத்துடன் இருப்பினும் போதிய சாலை வசதிகள் இல்லாமையால் அருகில் உள்ள சந்தைகளுக்கு எடுத்து சென்று சந்தைபடுத்த இயலாத சூழ்நிலை உள்ளது. இச்சாலைகள் அமையும் போது இச்சிறுதானியங்களை சந்தைபடுத்தவும் அதிக அளவு உற்பத்தியை பெருக்கவும் வழிவகை ஏற்பட்டு இம்மக்களின் பொருளாதாரம் பன்மடங்கு உயரும். தேர்தல் சமயங்களில் வாக்குச்சாவடி பொருட்களும் தலைச்சுமையாகவே எடுத்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும், அரசால் அறிவிக்கப்படும் வளர்ச்சிப்பணிகளை செயல்படுத்திடும் பொருட்டு உரிய கட்டுமானப் பொருட்களை கீழிருந்து மேலே எடுத்து செல்ல போதிய சாலை வசதிகள் இல்லாததால் உரிய காலத்தில் திட்டப்பணிகளை செயல்படுத்த முடியாத சூழ்நிலை நிலவுகிறது.
மேலும், பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை கைவிடவேண்டிய சூழ்நிலையுள்ளது. கீழூர், மேலூர், கெடமலை ஆகிய குக்கிராமங்களில் சாலை அமைப்பதன் மூலம் மலையில் வசிக்கும் 258 குடும்பங்களை சார்ந்த 1727 நபர்களுக்கும், மலையில் விவசாயம் செய்து வரும் அடிவாரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் வசித்துவரும் சுமார் 800 குடும்பங்களை சேர்ந்த 3500 நபர்களும் ஆகமொத்தம் 1058 குடும்பங்களைச் சார்ந்த சுமார் 5000-க்கும் மேற்பட்ட மக்கள் நேரடியாக பயன்பெறுவர். இதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாண்புமிகு வனத்துறை அமைச்சர், மாநிலங்களவை உறுப்பினர். மக்களவை உறுப்பினர் அவர்களின் தொடர் முயற்சிகளால் ரூ.139.654 கோடி மதிப்பில் 3107 கி.மீட்டருக்கு சாலை அமைத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அரசாை நாள் 17.08.2023 ன் படி நபார்டு திட்டத்தின் கீழ் உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான ஒப்பந்தப்புள்ளிகள் 27.10.2023 ல் முடிக்கப்பட்டு, வேலை உத்தரவு 18:12.2023 வழங்கப்பட்டுள்ளது. தற்போது துவங்கப்படும் இப்பணியானது 31-05-2025 ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் மாவட்ட நிர்வாகத்தால் அனைத்து தொடர் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 75 ஆண்டுகளுக்குப் பிறகு சாலை அமைக்கும் பணிகளுக்காக இன்று அடிக்கல் நாட்டப்பட்டது மலைவாழ் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
மலைவாழ் மக்கள் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.#rasipuram #namakkal #dmk #dmk4tn2024 #dmknews .