கார், வீட்டை சேதப்படுத்தி பெண்களை மிரட்டி சென்ற கும்பல்

நாமக்கல்: ரியல் எஸ்டேட் புரோக்கரை அரிவாள் கொண்டு வெட்ட சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

கார், வீட்டை சேதப்படுத்தி  பெண்களை மிரட்டி சென்ற கும்பல்
DAMAGED CAR

நாமக்கல்: ரியல் எஸ்டேட் புரோக்கரை அரிவாள் கொண்டு வெட்ட சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

வீட்டை விட்டு வெளியே வராததால் கார், வீட்டை சேதப்படுத்தி பெண்களை மிரட்டி சென்ற கும்பல்.

சிசிடிவி வீடியோ காட்சியால் புதுச்சத்திரம் போலீசார் அதிர்ச்சி.

நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் ஒன்றியம் செம்பாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (44), இவர் ரியல் எஸ்டேட் இடைத்தரகர் தொழில் செய்து வருகின்றார். இவரது தொழிலுக்காக அதேப் பகுதியை சேர்ந்த செல்வம், பாலு என்பவரிடம் 15 ஆண்டுகளுக்கு முன்பு டிராக்டர் டீலர் எடுத்து தொழில் செய்து உள்ளார், இதில் 3 பேருக்கும் வரவு, செலவு இருந்து வந்துள்ளது, மேலும் இருவருக்கும் கொடுக்க வரவேண்டிய பணத்தை அவ்வப்போது சுரேஷ் கொடுத்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் பாக்கி பணம் தரவேண்டி உள்ளது எனக்கூறி நேற்று (08.07.24 ) இரவு 10.30 மணிக்கு சுமார் 10 க்கும் மேற்பட்ட அடி ஆட்களுடன் செல்வம், பாலு ஆகியோர் அரிவாளுடன் சுரேஷ் வீட்டிற்கு சென்றுள்ளனர். இவர்களின் சத்தத்தை கேட்டு வெளியே வந்த சுரேஷ், இவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் பாலு, செல்வம், அடி ஆட்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து சுரேஷ் வீட்டிற்குள் சென்று பதுங்கி கொண்டார். வீட்டிற்கு வெளியே இருந்த சுரேஷின் மனைவியை பார்த்து உனது கணவனை வெட்டி விடுவேன் என மிரட்டி உள்ளனர்... மேலும் வீட்டின் வெளியில் நிறுத்தி வைத்திருந்த காரின் கண்ணாடியை அரிவாள் கொண்டு வெட்டியும், வீட்டின் உள்ளே கற்களை வீசி சேதப்படுத்தி விட்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் சுரேஷ் புகார் அளித்துள்ளார், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், கார், வீட்டினை சேதப்படுத்திய சம்மந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பாலு, செல்வம் ஆகியோர் அரிவாளுடன் இரவு சுரேஷ் வீட்டிற்கு சென்று மிரட்டுவது, காரினை சேதப்படுத்திய சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன.

இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.