செம தம்பி செம... பறவைகள், விலங்குகள் போல் மிமிக்கிரி செய்த சிறுவன்...Vibe,. ஆன அமைச்சர்
பல குரலில் அசத்திய பள்ளி மாணவன் வியந்து பாராட்டி பரிசளித்த எம் பி இராஜேஷ்குமார் விடாமல் கைகளை தட்டி பாராட்டு
செம தம்பி செம... பறவைகள், விலங்குகள் போல் மிமிக்கிரி செய்த சிறுவன்...Vibe,. ஆன அமைச்சர்
இராசிபுரம் அடுத்த பிலிப்பாகுட்டை பெரியார் சமுத்தவபுரத்தில் நடைபெற்ற சுற்றுலா பொங்கல் மற்றும் சமத்துவ பொங்கல் விழாவில் பறவைகள் மற்றும் குழந்தைகள் போல பல குரலில் மிமிக்கிரி செய்து அசத்திய பள்ளி மாணவனை கைதட்டி உற்சாகப்படுத்தி வியந்து பாராட்டி பரிசளித்த மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என் இராஜேஷ்குமார்.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், கார்கூடல்பட்டி ஊராட்சி, பிலிப்பாக்குட்டை, பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா,அவர்கள் தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் முன்னிலையில், சுற்றுலா பொங்கல் மற்றும் சமத்துவ பொங்கல் விழா 2024 சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பாரம்பரியத்தை போற்றும் வகையில் மயிலாட்டம்,ஒயிலாட்டம் சிவன் பார்வதி வேடம், உறியடித்தல் இசை நாற்காலி மற்றும் கயிறு இழுத்தல் போட்டிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடினர். மேலும் கபடி போட்டி, உறியடித்தல் ஓட்டப் பந்தயம் ,பல குரல் போட்டி கோலப்போட்டி உள்ளிட்ட போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரது முன்பும் பறவைகள், விலங்குகள் போல் பல குரலில் அசத்திய பள்ளி மாணவன் வியந்து பாராட்டி பரிசளித்த எம் பி இராஜேஷ்குமார் விடாமல் கைகளை தட்டி பாராட்டு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். #festivel #rasipuram #pongal #ministerkrn #vibes #pongalgames #pongalparisu2024 #pongalfestival