பக்தியின் பெயரால், சமயத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் பாஜக | NANJIL SAMPATH

மொழிப் போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்

இராசிபுரம்:பக்தியின் பெயரால், சமயத்தின் பெயரால் மக்களை இரண்டாக பிளவுபடுத்தும் பாஜக

நாஞ்சில் சம்பத் ராசிபுரத்தில் பேச்சு....

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே மொழிப் போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. இலக்கியவாதியும், பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் பங்கேற்று பேசினார்.

அப்போது, ஒவ்வொரு நாளும் துன்பத்திலும், துயரத்திலும் உள்ள நமக்கு, இது நமக்கான நேரம். நம் அடையாளத்தை மீட்க வேண்டும் எனில் மோடியின் அடையாளத்தை நீக்கிவிட்டால் மட்டுமே இந்தியாவை காக்க முடியும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் புல்வாமா தாக்குதலைக் பயன்படுத்திக் கொண்டு நாட்டுக்கு ஆபத்து என சொல்லி வெற்றி பெற்றார்கள்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற ராமருக்கு ஆபத்து எனச் சொல்லி கோவில் கட்டியுள்ளனர். ராமர் கோவில் பிரதிஸ்டை செய்த அன்றைக்கு தமிழ்நாட்டில் 19 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்திய ஆட்சி திமுக. 3 ஆண்டுகள் நிறைவு பெறாத நிலையில், 1001 கோவிலுக்கு திமுக அரசு குடமுழுக்கு செய்துள்ளது. பக்தியின் பெயரால், சமயத்தின் பெயரால் மக்களை இரண்டாக பிளக்க பாஜக., முயற்சித்து வருகிறது.

அதை தமிழகம் எந்தக் காலத்திலும ஏற்றுக்கொள்ளாது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வியர்வை சிந்தி உழைக்க வேண்டும். வெற்றி பெறவில்லை என்றால், மிகப்பெரிய சர்வாதிகார பள்ளத்தில் நாட்டை தள்ளிவிடுவார்கள். தலைநகர் சென்னை தண்ணீரில் மூழ்கியது. வாழ தகுதியற்ற நகரம் என்றனர். 24 மணி நேரத்தில் வாழ தகுதியுள்ள நகரமாக மு.க.ஸ்டாலின் மாற்றினார். ஆனால், குஜராத்தில் வெள்ளம் வந்தபோது, அதனை பிரதமர் விமானத்தில் சென்று பார்வையிடுகிறார். 2 லட்சம் நிதி வழங்கினார். குஜராத்திற்கு உதவியதில் ஒரு சதவீதம் கூட சென்னைக்கு உதவவில்லை. ஒரு கண்ணில் வெண்ணையும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைப்பதில் என்ன நியாயம். தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். அப்புறப்படுத்துவேன் என்கின்றனர், அது நடக்காது என்றார். தொடர்ந்து மொழிப் போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி புகழுரையாற்றினார்.

#rasipuram #dmk #dmk4tn2024 #admk #bjp