சேலம் | ஐக்கிய விவசாயிகள் சங்கம். தமிழ்நாடு மற்றும் அனைத்து விவசாய சங்கங்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தலைவாசல் | உலகத்தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரக் கோரி தமிழக அரசை வலியுறுத்தி நடைபெறவிருக்கும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

உலகத்தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரக் கோரியும், கால்நடை ஆராய்ச்சி பூங்காவிற்கு சொந்தமான இடத்தில் மண்ணை மலடாக்கும் தோல் தொழிற்சாலையை கைவிடக் கோரியும், கால்நடை பூங்கா மற்றும் கால்நடை ஆராய்ச்சி மைய பயன்பாட்டிற்குரிய காவிரி தண்ணீரை உளுந்தூர்பேட்டை சிப்காட் திட்டத்திற்கு கொண்டு செல்வதை கைவிடக் கோரியம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
உலகத்தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்காவை முழுமையாக செயல்படுத்த கோரியும், தோல் நோய்கள், குடிநீர் மாசு, விவசாய நிலம் மலட்டுத்தன்மை போன்ற பாதிப்புகள் ஏற்பட காரணமாக இருக்கும் ராணிப்பேட்டை, ஆம்பூர், வாணியம்பாடி, மேல்விஷாரம் ஆகிய இடங்களில் செயல்படும் தோல் தொழிற்சாலைகளை கால்நடை ஆராய்ச்சி பூங்காவிற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் தோல் தொழிற்சாலை அமைத்தால் மேலே சொன்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதால் தோல் தொழிற்சாலையை கைவிடக் கோரியும், கால்நடை பூங்கா மற்றும் ஆராய்ச்சி நிலைய பயன்பாட்டிற்குரிய காவிரி தண்ணீரை உளுந்தூர்பேட்டை சிப்காட் திட்டத்திற்கு கொண்டு செல்வதை கண்டித்தும், கால்நடை பூங்கா மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சுற்றுவட்டாரத்தில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க கோரியும், ஆவின் பல்பொருள் பெருக்கத்திட்டத்தையும், நன்னீர் மீன் வளர்ப்பு திட்டத்தையும் செயல்படுத்த தமிழக அரசை வலியுறுத்தி நடைபெறவிருக்கும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சுற்று வட்டார விவசாய பெருங்குடி மக்களும், விவசாய சங்கங்களின் தலைவர்களும் கலந்து கொண்டு இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை சிறப்பிக்க அன்போடு அழைக்கிறோம்.
இங்கனம் - ஐக்கிய விவசாயிகள் சங்கம். தமிழ்நாடு மற்றும் அனைத்து விவசாய சங்கங்கள். நாள் 07-10-2024 காலை - 10.00 மணி. இடம் - கால்நடை ஆராய்ச்சி நிலையம். கூட்ரோடு. தலைவாசல், சேலம் மாவட்டம் .