தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த இரு சக்கர வாகனம் பரபரப்பு | BIKEFIRE

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் ஹீரோ ஹோண்டா ஸ்ப்லெண்டர் வண்டி திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ராசிபுரம் அருகே இரு சக்கர வாகனம் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் ஹீரோ ஹோண்டா ஸ்ப்லெண்டர் வண்டி திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நாமக்கல் டு சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நாமக்கல்லில் இருந்து ஒரே இருசக்கர வாகனத்திலேயே நான்கு பேர் வந்ததாக கூறப்படுகிறது. இந்த இருசக்கர வாகனத்தை நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கம்பி கட்டும் தொழிலாளி அருண் (38) என்பவர் ஓட்டி வந்ததாகவும், இதில் நான்கு பேர் பயணம் செய்து வந்ததாகவும், புதுச்சத்திரம் அருகே வரும்போது டேங்கின் மேலுள்ள கவரில் வைக்கப்பட்டிருந்த செல்போன் வெடித்து தீப்பற்றி இருக்கக் கூடும் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது...

சம்பவ இடத்திற்கு வந்த ராசிபுரம் தீயணைப்புத் துறையினர் இருசக்கர வாகனத்தில் பற்றி இரண்டு அத்தையே கட்டுக்குள் கொண்டு வந்தனர் இது சம்பந்தமாக புது சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர் .