கொல்லிமலை மலைவாழ் பெண்கள் பாரம்பரிய கும்மியாட்டம் ஆடி திமுக நிர்வாகிகளுக்கு உற்சாக வரவேற்பு

திட்டங்கள் குறித்து பேசும் போது கீழே இருந்த மலை வாழ் மக்கள் கைதட்டியும் ஆடியும் பாடியும் தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர் .

கொல்லிமலை மலைவாழ் பெண்கள் பாரம்பரிய கும்மியாட்டம் ஆடி திமுக நிர்வாகிகளுக்கு உற்சாக வரவேற்பு

நாமக்கல்:கொல்லிமலை திமுக கழக செயலாளர்கள் கூட்டம் மாநிலங்களவை உறுப்பினர் கே ஆர் என் ராஜேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

மலைவாழ் பெண்கள் பாரம்பரிய கும்மியாட்டம் ஆடி நிர்வாகிகளுக்கு உற்சாக வரவேற்பு. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஒன்றியத்தில் திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான இந்திய கூட்டணியின் கழக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே ஆர் என் இராஜேஷ்குமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் கொல்லிமலை ஒன்றிய செயலாளர் செந்தில் முருகன் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என் இராஜேஷ்குமார் கொல்லிமலை மலை வாழ் மக்களுக்கு திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விவரித்தார்...

திட்டங்கள் குறித்து பேசும் போது கீழே இருந்த மலை வாழ் மக்கள் கைதட்டியும் ஆடியும் பாடியும் தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர் .

கொல்லிமலை ஒன்றிய கழக செயல்வீர்கள் கூட்டம் எனது தலைமையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு கழக தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் தளபதி M. K. Stalin அவர்களின் ஆசிபெற்ற இந்தியா கூட்டணியின் வேட்பாளர் திரு. மாதேஸ்வரன் அவர்களை ஆதரித்தும், பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கி பேசினேன். இக்கூட்டமானது சட்டமன்ற உறுப்பினர் திரு.பொன்னுசாமி அவர்கள், ஒன்றிய கழக செயலாளர் திரு.செந்தில்முருகன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் பொதுக்குழு உறுப்பினர் திரு.காளியண்ணன் அவர்கள், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் திரு.ஆனந்தகுமார் அவர்கள், கிளை கழக செயலாளர்கள்,கிளை பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.