18 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு உற்சாகமாக நடந்த குதிரை வண்டிப் பந்தயம் | HOURES RACIING
இராசிபுரம் :மாபெரும் குதிரைப் பந்தயம் போட்டி.இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த குதிரைகள்.
ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு மாரியம்மன் நண்பர்கள் குழு மற்றும் சசிகுமார் நண்பர்கள் குழு இணைந்து நடத்திய இந்த குதிரைப்பந்தயத்தில் நாமகிரிப்பேட்டை ஒன்றிய செயலாளர் கே.பி.இராமசாமி பந்தயத்தை துவக்கி வைத்தார்.
18 ஆண்களாக தடை விதிக்கப்பட்டிருந்த இந்த குதிரை பந்தயம் இந்த பகுதியில் தற்போது 18 ஆண்டுகளுக்குப் பிறகு மிகுந்த உற்சாகத்துடன் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
தைப்பொங்கலை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரியமிக்க மாபெரும் குதிரை பந்தய போட்டியானது நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் நடைபெற்றது...
நாமகிரிப்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து துவங்கிய இந்த மாபெரும் குதிரை பந்திய போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குதிரைகள் கலந்து கொண்டன...
பெரிய குதிரை, சிறிய குதிரை, புதிய குதிரை என தரம் பிரித்து போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி வரும் பெரிய குதிரைக்கு ரொக்கமாக 20 ஆயிரம் ரூபாயும் சிறிய குதிரைக்கு 17 ஆயிரம் ரூபாயும் புதிய குதிரைக்கு 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது... பெரிய குதிரை போட்டியில் முதல் பரிசான 20 ஆயிரத்தை கோவை சேர்த்த கோகுல் என்பவரது குதிரை தட்டி சென்றது. இராண்டாம் பரிசு குளித்தலை பகுதி குதிரையும், மூன்றாம் பரிசு திருச்சி சபார் குதிரையும் தட்டி சென்றது.
போட்டிகளை வெற்றி பெற்ற குதிரைகளுக்கும் வீரர்களுக்கும் விழா குழு சார்பாகவும் நாமகிரிப்பேட்டை திமுக ஒன்றிய செயலாளர் கே பி இராமசாமி கேடயங்களையும் பரிசுத் தொகையும் வழங்கினார். 6 கிலோமீட்டர்,8 கிலோமீட்டர் 4, கிலோமீட்டர் என்ற தூரத்தை கடந்த குதிரைகளை, வீரர்களையும் இருபுறமும் பொதுமக்கள் கைகளை தட்டி உற்சாகப்படுத்தி வரவேற்றனர்.