பிரபல ஆடு திருடர்கள் கைது | GOAT | THEFT | ARRESTED
பிரபல ஆடு திருடர்கள் கைது

பிரபல ஆடு திருடர்கள் கைது.
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த தண்ணீர் பந்தல் காடு பகுதியில் வசிக்கும் கந்தசாமி என்பவர் வீட்டில் ஆடுகளை திருடிய சீராப்பள்ளி காந்திநகர் காலனி பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (41), மங்களபுரம் தாண்டகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பவித்ரன்(29) என இரண்டு பேரை நாமகிரிப்பேட்டை போலீசார் கைது செய்தனர் .
14 மேற்பட்ட திருட்டு வழக்குகள் இவர்கள் மீது உள்ள நிலையில் ஆடுகளை திருடி சிக்கிக் கொண்ட இருவர்கள், திருடிய ஆட்டை இறைச்சி கடையில் விற்க்க வந்த போது கையும் காலவுமாக பிடித்து கைது செய்த நாமகிரிப்பேட்டை போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர் .