கிறிஸ்துவ கல்லூரியில் கலை கட்டிய பொங்கல் திருவிழா
ஆட்டம் பாட்டம் என பாரம்பரிய உடைகள் அணிந்து பொங்கல் திருநாளை மாணவ மாணவிகள் உற்சாகமாக கொண்டாட்டம்.
தமிழரின் பாரம்பரியத்தை போற்றும் விதமாகத் தனியார் கல்லூரியில் மிகவும் பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்ட பொங்கல் திருவிழா! ராசிபுரம்:கிறிஸ்துவ கல்லூரியில் கலை கட்டிய பொங்கல் திருவிழா...
ஆட்டம் பாட்டம் என பாரம்பரிய உடைகள் அணிந்து பொங்கல் திருநாளை மாணவ மாணவிகள் உற்சாகமாக கொண்டாட்டம்...
பாரம்பரிய உடையவர்கள் அணிந்து புது பானையில் பொங்கல் வைத்த கல்லூரி மாணவ மாணவிகள் பொங்கலோ பொங்கல் என மகிழ்ச்சி பொங்க பொங்கல் திருநாளை வரவேற்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலாவில் செயல்பட்டு வரும் இலொயோலா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா... உலகம் முழுவதும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை வரவேற்று அனைத்து தரப்பினரும் பொங்கல் திருவிழாவை வரவேற்று உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். கலாச்சாரத்தின் தொன்மையைப் போற்றி நித்தம் ஒரு விடையினை தரும் சூரியனை வணங்கி பழையன கழிந்து புதியன பிறக்கும் தைத்திருநாள் கொண்டாட்டம்...
பண்பாட்டை பறைசாற்றும் விதமாக பாரம்பரியமிக்க பண்டிகை சங்க காலங்களில் இருந்து இன்று வரை தமிழரின் அடையாளமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வாசலில் அழகு கோலமிட்டு தைப் பொங்கலை வரவேற்கும் விதமாக விழாவில் கல்லூரியின் அருட்தந்தையர்கள் ஆசிரியர் பெருமக்கள் மற்றும் அலுவலர்கள் மாணவ மாணவிகள் என ஒன்று கூடி பொங்கல் வைத்து மகிழ்ச்சியாக கொண்டாடினர்... வளம் பெருகட்டும் ,மனம் நிறையட்டும் ,தித்திக்கும் பொங்கல் படைத்து,விவசாயின் மனம் குளிர, மும்மாரி மழை பொழிய, பூமி விளைவதற்கு சாமியாக நிற்கும் சூரியனை வணங்கி, கொண்டாடப்படும் லயோலோ கல்லூரியின் பாரம்பரிய விழாவிற்கு கௌரவ அழைப்பாளராக சென்னை தமிழர் கலையின் பேராசிரியர் முனைவர் காளிஸ்வரன் ஐயா அவர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். கல்லூரியின் செயலர் தந்தை அருட்திரு முனைவர் ஆல்பர்ட் வில்லியம் சே.ச. அவர்கள் சிறப்பு விருந்திரை அறிமுகம் செய்து வைத்தார். தமிழரின் பாரம்பரிய பொங்கல் விழாவினைப் பற்றி முனைவர் விக்டர் தேவதாஸ் அவர்கள் கருத்துரையாற்றினார் தரணியெங்கும் தலைக்கட்டும், மனங்கள் எல்லாம் மகிழ்ச்சி நிறையட்டும்,"பொங்கலோ பொங்கல்" எனக் கூறி கல்லூரியின் முதல்வர் அருள்முனைவர் சாமுவேல் ஜெயசீலன், கல்லூரியின் செயலர் அருள் முனைவர் ஆல்பர்ட் வில்லியம் மற்றும் இயேசு சபையாளர்கள் என அனைவரும் பொங்கல் விழாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்... பொங்கல் விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகளும் விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது... பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளாக கோலப்போட்டி , கயிறு இழுக்கும் போட்டி, பானை உடைக்கும் போட்டி என பல்வேறு நிகழ்ச்சிகளை கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த நிலையில் ஜல்லிக்கட்டு காளைகளை கல்லூரிக்கு அழைத்து வந்து தங்கள் பாரம்பரியத்தையும், வீரத்தையும் நிரூபித்தனர் மாணவர்கள் ...
இலொயோலா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள ஒவ்வொரு துறை மாணவ மாணவியர் பொங்கல் விழாவில் பங்கேற்றுநிறைவுற்றது, தமிழர் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்தனர். இவ்விழாவினை சிறப்பிக்கும் விதமாக பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டன. இவ்விழாவில் கல்லூரியின் அதிபர் முனைவர் அல்போன்ஸ் மாணிக்கம் சே.ச. மற்றும் கல்லூரியின் செயலர் அருள் முனைவர் ஆல்பர்ட் வில்லியம் சே.ச, அவர்கள், கல்லூரியின் முதல்வர் அருள் முனைவர் சாமுவேல் ஜெயசீலன், சே.ச, அவர்களும் மற்றும் இயேசு சபையினர் அனைவரும் கலந்து கொண்டு பொங்கல் விழாவிற்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். 5 பேட்டிகள் உள்ளது.