திமுக 2-வது இளைஞர் அணி மாநாட்டிற்க்கான பைக் பேரணி

திமுக., இளைஞர் அணி மாநாட்டுக்குச் செல்லும் இருசக்கர வாகன பேரணியை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.

DMK CONFERENCE BULLET RALLY

ராசிபுரம் அடுத்த காக்காவேரி முத்தாயம்மாள் கல்லூரி அருகே, சேலம் திமுக., இளைஞர் அணி மாநாட்டுக்குச் செல்லும் இருசக்கர வாகன பேரணியை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.

சேலத்தில் ஜனவரி 21ம் தேதி, தி.மு.க இளைஞர் அணி 2வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டின் முக்கிய நோக்கத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில், கடந்த நவம்பர் 15ம் தேதி இருசக்கர வாகன பேரணியை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த காக்காவேரி முத்தாயம்மாள் கல்லூரி அருகே இருசக்கர வாகன பேரணியை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ராசிபுரத்தில் துவங்கிய பேரணி ஆத்தூர், வாழப்பாடி வழியாக சென்று மாநாட்டு பந்தலை சென்றடைகிறது. இதில், 100க்கும் மேற்பட்ட நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் அணியினர் கலந்துக் கொண்டனர்.