எவ்வளவு பாராட்டினாலும் பத்தாது.. ஒரு உயிரை காப்பாற்றியது

நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் A.K.P. சின்ராஜ் நெகிழ்ச்சி சம்பவம்...

அந்த நல்ல மனுசு வேனுயா...

இராசிபுரம் : வலிப்பு வந்து சாலையில் துடிதுத்துக் கொண்டிருந்த இளைஞரை மீட்டு தன் சொந்த காரில் அழைத்து சென்று சிகிச்சை அளித்த நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் A.K.P. சின்ராஜ் நெகிழ்ச்சி சம்பவம்...

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒரு வழி சாலையில் உள்ள கிருஷ்ணா தியேட்டர் எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞருக்கு வலிப்பு ஏற்பட்டு சாலையோரம் கீழே விழுந்து துடித்து கொண்டிருந்த இளைஞரை அவ்வழியாக வந்த நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ .கே .பி.சின்ராஜ் அவர்கள் பார்த்த நிலையில் உடனடியாக தன் காரை நிறுத்தி அந்த இளைஞருக்கு முதலுதவி செய்து உடனடியாக தன் காரிலேயே அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்று சிகிச்சைக்க அனுபதித்தார்.

ராசிபுரம் ஒரு வழிச்சாலையில் இளைஞர் ஒருவர் வலிப்பு ஏற்பட்டு சாலையில் துடித்துக் கொண்டிருந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் இரும்பு சுத்தியல் கொடுத்து காப்பாற்ற முயற்சித்த போதும் எந்த பயனும் இல்லாத நிலையில் அந்தச் சாலையில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று வந்த த எம்.பி A.K.P சின்ராஜ் உடனடியாக தன் காரை நிறுத்தி அந்த இளைஞருக்கு நினைவு உள்ளதா என்பதை சோதித்து உடனடியாக தன் காரிலேயே தூக்கிக்கொண்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து மருத்துவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினார்...

மேலும் அந்த இளைஞருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை கண்காணித்து அந்த இளைஞர் சுயநினைவு வந்தவுடன் அவரைப் பற்றிய முழுவதும் விசாரித்து சம்பந்தப்பட்ட உறவினர்களுக்கு தகவல் கொடுத்தது மட்டுமில்லாமல் எந்த மருத்துவ உதவியாக இருந்தாலும் தன்னை அனுகும்படி தெரிவித்து சென்றார்...