ராசிபுரம் காவல் சிறார் சிறுமிகளுக்கான கலந்துரையாடல் மற்றும் பரிசுகள் வழங்கும் விழா...
Police boys and girls club

ராசிபுரம் காவல் சிறார் சிறுமிகளுக்கான கலந்துரையாடல் மற்றும் பரிசுகள் வழங்கும் விழா...
ராசிபுரம் அருகேயுள்ள முத்தாயம்மாள் கல்லூரியில் நடைபெற்ற போலீஸ் கேர்ல்ஸ் மற்றும் பாய்ஸ் கிளப் நிகழ்ச்சியில் சிறுவர், சிறுமியருக்கு விளையாட்டு உபகரணம், டீ -சர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. சிறுவர், சிறுமிகளை ஒருங்கிணைத்து சமூக நலப்பணிகளில் ஈடுபடுத்தவும், தீய பழக்கங்களுக்கு ஆளாகாமல் இருக்கவும் தன்னார்வலர்கள் தலைமையில், போலீஸ் கேர்ல்ஸ் மற்றும் பாய்ஸ் கிளப் செயல்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில், ராசிபுரம் அடுத்த முத்தாயம்மாள் கல்லூரியில் போலீஸ் கேர்ல்ஸ் மற்றும் பாய்ஸ் கிளப் சிறுவர், சிறுமியருக்கு விளையாட்டு உபகரணம், டீ-சர்ட் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., புவனேஸ்வரி , சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
இதில், சேலம் சரக அளவில் நடைபெற்ற குறும்படம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் விளையாட்டு உபகரணம் மற்றும் டீ-சர்ட் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.