துணைத் தலைவரை மாற்றக்கோரி ஆட்சியரிடம் புகார் | பஞ்சாயத்து தலைவர்
பஞ்சாயத்து துணைத்தலைவர் பஞ்சாயத்து பணிகளுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை | துணைத் தலைவரை மாற்றக்கோரி ஆட்சியரிடம் புகார்
இராசிபுரம்:பஞ்சாயத்து பணிகளுக்கு கையெழுத்து போட மறுக்கும் பஞ்சாயத்து துணைத்தலைவர்.
பஞ். துணைத் தலைவரை மாற்றக்கோரி கலெக்டரிடம் அப்பாவியாக தெரிவித்த பட்டியலின பஞ்சாயத்து தலைவர்
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் பலந்தின்னிப்பட்டி பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் ஜெயந்தி வெங்கடேஷ். பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர். பஞ்சாயத்து துணைத் தலைவராக வேறு சமுகத்தைச் சேர்ந்தவர் உள்ளார். ஆறு பேர் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த நிலையில், நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் உமா அவர்கள் நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது வெண்ணந்தூர் ஒன்றியம் பழந்தின்னிப்பட்டி ஊராட்சியில் ஆய்வு மேற்க் கொண்டார். அப்போது, பஞ்சாயத்து பணியாளர் ஒருவர் தனக்கு இந்த மாதம் சம்பளம் வரவில்லை என ஆட்சியரிடம் புகார் தெரிவித்தார். இதுகுறித்து, பஞ்சாயத்து தலைவர் ஜெயந்திவெங்கடேஷிடம் ஆட்சியர் உமா கேட்டார். அதற்கு பஞ்சாயத்து தலைவர் ஜெயந்திவெங்கடேஷிடம், பஞ்சாயத்து துணைத்தலைவர் பஞ்சாயத்து பணிகளுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை. எதற்கும் கையெழுத்து போட மறுக்கிறார். எனவே பஞ்சாயத்து துணைத்தலைவரை மாற்றி விடுங்கள் என அப்பாவியாக பஞ்சாயத்து தலைவர் கேட்டார்.
அதற்கு ஆட்சியர் உமா அது எப்படி மா மாற்ற முடியும் என்றார்.
தொடர்ந்து, அதிகாரிகள் ஆய்வு செய்த நோட்டு, வரி வசூல் இயந்திரம் இல்லாதது குறித்து கேட்டார். உரிய பதில் சொல்ல முடியாமல் அதிகாரிகள் விழி பிதுங்கினர்.