எந்த ஊரிலும் இவ்வளவு பிளாஸ்டிக் பையை நான் பார்க்கல-மாவட்ட ஆட்சியர் ஆவேசம்

இராசிபுரம்:தமிழக முதல்வரின் முத்தான திட்டமான "மீண்டும் பஞ்சப்பை"திட்டத்தை செயப்படுத்த தவறிய நகராட்சி இந்த இராசிபுரம் தான் - கடுப்பான ஆட்சியர்

இராசிபுரம்:தமிழக முதல்வரின் முத்தான திட்டமான "மீண்டும் பஞ்சப்பை"திட்டத்தை செயப்படுத்த தவறிய நகராட்சி இந்த இராசிபுரம் தான் - கடுப்பான ஆட்சியர்...

யாருமே வேலை செய்றது இல்ல எங்க பார்த்தாலும் பிளாஸ்டிக் பைகள்... எந்த ஊரிலும் இவ்வளவு பிளாஸ்டிக் பையை நான் பார்க்கல- ராசிபுரம் நகராட்சியில் கடைகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ஆவேசம் அனைத்து அதிகாரிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பேன்..எச்சரித்த மாவட்ட ஆட்சியரால் அரண்டு போன அதிகாரிகள்..

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் அரசின் திட்டங்கள் சேவைகளை செயல்பாடுகள் குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எஸ் .உமா அவர்களின் கள ஆய்வு அதிரடி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் உள்ள கடைகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்...

கடைகளில் விற்கப்படும் உணவு பண்டம் குளிர்பானம் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்ததோடு கடைகளில் நெகிழி பைகள் பயன்படுத்தப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டார்..

ஆய்வில் அனைத்து கடைகளிலும் கிலோ கணக்கில் நெகிழிப்பைகள் வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த ஆட்சியர் அதிகாரிகளை அழைத்து எந்த வேலையும் நீங்கள் செய்வதில்லை... மாவட்ட ஆட்சியர் வந்து தான் பாக்கனும் என்பது விதியா ? எந்த ஒரு நகராட்சியிலும் இவ்வளவு மோசமாக அதிகாரிகள் மெத்தனப் போக்கில் செயல்படுவதில்லை இந்த நகராட்சியில் மட்டுமே இவ்வளவு மோசமாக நெகிழி பைகள் அனைத்து பயன்படுத்தப்பட்டு வருகிறது என வேதனையுடன் கூறினார்.

நெகிழிப்பைகள் கண்டெடுக்கப்பட்ட அனைத்து கடைகளுக்கும் அபராதம் விதிப்பதோடு அவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்க வேண்டும் மேலும் மெத்தனமாக செயல்பட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார் . ஒவ்வொரு கடையாக ஆய்வில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர் சுற்றுச்சூழலை பாதுகாத்திடும் வகையில் அனைவரும் துணிப்பைகள் மற்றும் மஞ்ச பைகளை பயன்படுத்துமாறும், தயாரிக்கும் உணவுகளை தரமாகவும் பாதுகாக்கவும் வைக்க கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினார் ... தமிழக முதல்வர் வருங்கால சந்ததிகளை மனதில் கொண்டு "மீண்டும் பஞ்சப்பை" என்ற சிறப்பான திட்டத்தை செயல்படுத்தி ஓராண்டு காலம் ஆகியும் அதிகாரிகள் இப்படி மெத்தனப் போக்கில் செயல்படுவது நியாயமா என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து அங்கு பேருந்துக்காக காத்திருந்த மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து அரசின் இலவச பேருந்துகள் குறித்தும் அரசின் திட்டங்களை குறித்தும் கேட்டறிந்தார்..

தொடர்ந்து புதிய பஸ் நிலையம் பகுதியில் செயல்பட்டு வரும் நகராட்சிக்கு சொந்தமான கழிப்பறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் .

ஆய்வுக்குப் பிறகு ராசிபுரம் நகராட்சி அலுவலகத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் எஸ்.உமா பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.