திமுகவில் தொடரும் காலில் விழும் கலாச்சாரம்..

அதிமுக அமைச்சர்கள் காலில் விழும் கலாசாரத்தை விமர்சித்த திமுக அமைச்சர்கள் அரசு விழா மேடையில் அமைச்சர் கே.என் நேரு காலில் விழுந்தது திராவிட கொள்கைக்கு எதிரானது என்கின்றனர் திமுக கட்சியினர்.

திமுக-வில் தொடரும் காலில் விழும் கலச்சாரம்.. விழா பந்தலில் இருந்து வெளியேறிய பெண்கள கயிறு கட்டி அடைத்த கண்ணியமிக்க இராசிபுரம் காவல் அதிகாரிகள்...

தேசிய கீதம் ஒளிக்கப்பட்ட நிலையில் கூட விழா பந்தலை விட்டு மரியாதை யின்றி வெளியேறிய திமுக தொண்டர்கள்.. அமைச்சர் கே.என். நேரு பேச பேச காலியான கூடாரம்..

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில்,ரூ. 854.37 கோடி மதிப்பீட்டில், இராசிபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டதிற்கான அடிக்கல் நாட்டு விழா(4-8-23)நடைபெற்றது இவ்விழாவில் மேடை அலங்காரம், வாழை மரங்கள்,பந்தல் முதல் பேனர் வைக்கும் வரை இரவு பகலாக அனைத்து ஏற்பாடுகளும் திமுக நகர செயலாளர் என்.ஆர்.சங்கர் தட முடலாக ஏற்பாடு செய்திருந்தார்.விழாவிற்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எஸ் உமா தலைமை தாங்கினார். இவ்விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு பங்கேற்று ராசிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்க்கு அடிக்கல் நாட்டி பயனாளிகளுக்கு 8 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந் நிகழ்ச்சிக்காக ராசிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதியை சேர்ந்த கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள், பெண்கள் என சுமார் 2000 நபர்களை ஆடு மாடுகளை மந்தையில் அடைப்பது போல் சரக்கு வாகங்களில் ஏற்றி வரப்பட்ட நிலையில் ஆட்களை ஏற்றி வந்து சரக்கு வாகனங்களை போக்குவரத்து காவல் துறை அதிகாரிகளே கண்டும் காணமல், கட்சியின் விசுவாசிகள் போல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நிறுத்திவிட்டு வர அன்பு கட்டளையிட்டனர். சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றுவது குற்றம் என தெரிந்தும் இராசிபுரம் காவல் துறையினர் மற்றும் போக்குவரத்து துறையினர் கண்டுகொள்ளாமல் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட்டது தற்போது பேசு பொருளாகி உள்ளது. தமிழக போக்குவரத்து துறையில் பல்வேறு கடுமையான சட்டங்கள்,கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்து விதிகளை மீறியவர்கள் மீதும், அப்பாவி பொதுமக்களிடமும் பல மடங்கு அபராத தொகை வசூலிக்கப்பட்டு வருவதை அனைவரும் அறிவோம். ஆனால் போக்குவரத்து அதிகாரிகளே போக்குவரத்து விதி மீறலுக்கு உடந்தையாக கட்சி பிரமுகர்கள் போல் செயல்படுவது காவல் துறைக்கே இழுக்கு என்கின்றனர் சமூக ஆர்வலர்கள் இவ்விழாவானது முழுக்க முழுக்க கட்சி விசுவாசிகளான இராசிபுரம் காவல் துறை கட்டுபாட்டிலேயே நடைபெற்றாக கூறும் சமூக ஆர்வலர்கள் விழா பந்தலில் இருந்து பொதுமக்களும் மற்றும் தொண்டர்களும் வெளியே செல்லமால் இருக்க காவல் துறையினர் அவர்களை கண்காணித்து கம்பி வேலி அமைத்து கயிறு கட்டி "அங்கேயே உக்காரு வெளியே போக கூடாது" என கூட்டத்தை தங்கள் கட்டுபாட்டில் வைத்தது தான் ஹைலைட்... இருப்பினும் அமைச்சர் கே. என் .நேரு பேசிக்கொண்டே இருக்கும் போது யோவ் நீங்க குடுக்கற காசுக்கு எவ்வளவு நேரம் இருக்கறது மணி 10 ஆகுது பசிக்குது வெளியே விடுங்க என திமுக மகளிர் அணியை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறி செல்ல அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி வெளியே போக கூடாது கூட்டம் முடிந்த பின் செல்ல முடியும் என கட்டளையிட்டனர். கடந்த அதிமுக ஆட்சியில் மூத்த தலைவர்கள் காலில் விழும் நிகழ்வுகளை திமுகவினர் டயர்நக்கி என பல்வேறு கொச்சையான விமர்சனங்களை வைத்த நிலையில் அரசு விழா மேடையில் அமைச்சரின் கால்களில் முக்கிய நிர்வாகிகள் விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிமுக அமைச்சர்கள் காலில் விழும் கலாசாரத்தை விமர்சித்த திமுக அமைச்சர்கள் தற்போது அரசு விழாவில் மேடையில் அமைச்சர் கே.என் நேரு காலில் விழுந்தது திராவிட கொள்கைக்கு எதிரானது என்கின்றனர் திமுக கட்சியினர்... நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும்,மாநிலங்களவை உறுப்பினர் கே ஆர் என் இராஜேஷ்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி,ராசிபுரம் நகரச் செயலாளர் என் ஆர் சங்கர் ஆகியோர் அமைச்சர் கே.என் நேரு காலில் விழுந்து ஆசி பெற்றனர்.. காலில் விழுவது திராவிட கொள்கைகளுக்கு எதிரானது என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்ட நிலையில், இவர்களின் இந்த செயல் திராவிட மாடலுக்கே எதிராக அமைந்தது. விழாவின் இறுதியில் தேசிய கீதம் ஒலிக்கும் போது மேடையில் பயனாளிகளுக்கு நலதிட்டம் வழங்கும் நேரத்தில் கீழே அமர்ந்து இருந்த பெண்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் என 1000 க்கும் மேற்பட்டோர் பாதியிலயே வெளியே செல்ல முயன்ற போது கூட்டத்தை கட்டுபடுத்த முடியாதல் காவல் துறையினர் திணறிய நிலையில் வேறு வழியின்றி அவர்களை வெளியே விட்டனர். இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. கே. பி. சின்ராஜ், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே. ஆர். என். இராஜேஷ்குமார், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர்கள், இராசிபுரம் நகர மன்றத் தலைவர் முனைவர் கவிதா சங்கர், இராசிபுரம், நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூர், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியங்களின் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், பேரூராட்சித் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டது குறிப்பிடதக்கது.